Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

சிரிப்பு - ஓஷோ

Thursday, April 26, 2012

இந்த ஓஷோ தமிழாக்கம் இங்கிருந்து எடுக்கப்பட்டது.


1.சிரிப்பு
மனிதன் முழுமையடைய மிக முக்கியமான பகுதி நகைச்சுவை உணர்ச்சியாகும். அது அவனை ஆரோக்கியமாக வைத்திருக்கும், இளமையாக வைத்திருக்கும், புதிதாக
வைத்திருக்கும். மேலும் நூற்றாண்டுகளாக இந்த சோகமான மக்கள் மதத்தை
பிடித்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் மசூதியிலிருந்து, கோவிலிருந்து, சர்சுகளிலிருந்து சிரிப்பை வெளியேற்றி விட்டனர். என்று இந்த புனிதமான இடங்களுக்குள் சிரிப்பு நுழைகிறதோ அன்றுதான் இவை உண்மையிலேயே
புனிதமான இடங்களாக மாறும், ஏனெனில் அப்போதுதான் அவை முழுமை
அடைகின்றன.
சிரிப்பு ஒன்றுதான் மனிதனை விலங்கிலிருந்து வேறு படுத்திக் காட்டும் குணம்.
மனிதனால் மட்டுமே முட்டாள்தனத்தை, மடத்தனத்தை பார்க்க முடியும். இயற்கையின்
வேடிக்கையை உணரக் கூடிய தன்னுணர்வும் ஆற்றலும் மனிதனுக்கு மட்டுமே உண்டு.
இது ஒரு பிரபஞ்ச விளையாட்டு, இது கடுகடுப்புக்குரிய விஷயமல்ல.
கடுகடுப்பு ஒரு வியாதி. ஆனால் கடுகடுப்புக்கு மரியாதை தரப்படுகிறது, கௌரவம்
தரப்படுகிரது, பாராட்டப்படுகிறது. ஒரு துறவியாக இருக்க வேண்டுமென்றால் நீ
கடுகடுப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அதனால்தான் நோய் கொண்ட
மக்கள் மட்டுமே மதத்தில் ஆர்வம் காட்டுகின்றனர். - சிரிக்க தெரியாத மக்கள். மேலும்
சிரிக்க தெரியாத மக்கள் மனித இனத்தைவிட குறைவானவர்கள். இன்னும் மனித
இனமாகாதவர்கள். - அவர்களது இருப்பு தெய்வீகமானது என்று எப்படி சொல்ல அது
சாத்தியமற்றது. அவர்கள் இன்னும் மனிதர்களாகவே இல்லை. மனிதன்தான்
தெய்வத்திற்க்கும் விலங்குக்கும் இடையே உள்ளவன். அதனால்தான் நான் சிரிப்புக்கு
நகைச்சுவை உணர்வுக்கு அளவற்ற மரியாதை கொடுக்கிறேன்.
சிரிப்பு பிரார்த்தனையை விட அதிக புனிதமானது. ஏனெனில் பிரார்த்தனையை எந்த மடையன் வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கு புத்திசாலித்தனம் தேவை
இல்லை. சிரிப்புக்கு புத்திசாலித்தனம் தேவை. அதற்கு விஷயங்களை விரைவாக
பார்க்கும் அறிவு வேண்டும், அந்த வினாடியில் அங்கிருக்கும் மனம் வேண்டும். ஒரு
ஜோக்கை விவரிக்க இயலாது. நீ அதை புரிந்து கொள்ள வேண்டும் இல்லாவிடில்
நீ அதை தவற விட்டு விடுவாய். அதை விவரித்து கூறினால் அது அதன் முழு அழகையும் இழந்து விடும். எனவே ஜோக்கை விவரிக்க முடியாது. நீ அதை
உடனடியாக புரிந்து கொள்ள வேண்டும். உன்னால் அதை உடனடியாக புரிந்து
கொள்ள முடியா விட்டால் நீ அதை முயற்சி செய்து புரிந்து கொள்ளலாம், ஆனால்
உன்னால் அப்போது அதன் பொருளைத்தான் புரிந்து கொள்ள முடியும், அப்போது
ஜோக் அங்கிருக்காது. அது அந்த வினாடியில்தான் இருக்கிறது.
நகைச்சுவைக்கு அங்கிருக்க வேண்டும், முழுமையாக அந்த வினாடியில் அங்கே
இருக்க வேண்டும். அது பகுத்தாயும் விஷயமல்ல, அது உள்ளே உதிக்கும் விஷயம்.
உன்னால் முழுமையாக சிரிக்க முடியுமென்றால் அங்கே புரிந்து கொள்ள வேண்டிய
சில விஷயங்கள் உள்ளன. ஆழமான சிரிப்பில் அகம்பாவம் மறைந்து விடுகிறது.
அது அங்கே காணப்படுவதில்லை. அகம்பாவம், சிரிப்பு இரண்டையும் ஒன்றாக
வைத்திருக்க முடியாது. அகம்பாவம் அங்கிருக்குமானால் அது உன்னை கடுகடுப்பாக
வைத்திருக்கும். எல்லா ஆணவக்காரர்களும் கடுகடுப்பானவர்களே, எல்லா கடுகடுப்பானவர்களும் ஆணவம் பிடித்தவர்களே.
சிரிக்க வேண்டுமென்றால் நீ குழந்தை போலாக வேண்டும் - ஆணவமின்றி. மேலும் நீ
சிரிக்கும்போது சிரிப்பு அங்கிருக்கும், நீ இருக்க மாட்டாய். சிரிப்பு நின்றவுடன் நீ
திரும்பவும் வருவாய். சிரிப்பு தொலைவுக்கு சென்றவுடன், அது தேய்ந்தவுடன் நீ
வருவாய், ஆணவம் மறுபடி வரும். ஆனால் சிரிக்கும்போது நீ ஆணவமற்ற நிலையின்
தரிசனத்தை காண்பாய்.
இரண்டு செயல்களின் போதுதான் நீ ஆணவமற்ற நிலையின் தரிசனத்தை எளிதாக
பெற முடியும். ஒன்று சிரிப்பு, மற்றொன்று நடனம். நடனம் உடல்ரீதியான முறை, ஆணவமற்ற நிலையை உணரக்கூடிய உடல் வழி. நடனமாடுபவர் நடனத்தில்
கரைந்து விடும்போது அவர் அங்கிருப்பதில்லை, நடனம் மட்டுமே இருக்கிறது.
சிரிப்பு நடனத்தை விட மென்மையானது, உள்ளிருப்பது. ஆனால் அதற்கும் அதே
அளவு மணம் உண்டு. நீ சிரிக்கும்போது...... அது உன் அடி வயிற்றிலிருந்து வரும்
சிரிப்பாக இருக்க வேண்டும். மேலோட்டமானதாக இருக்கக் கூடாது, வெறும் புன்சிரிப்பாக இருக்க கூடாது, நடிப்பாக இருக்கக் கூடாது.
கட்டாயத்திற்காகவோ, நடிப்பாகவோ, புன்சிரிப்பாகவோ இருந்தால் அது ஒரு அடி
வயிற்றிலிருந்து வருவதாக இருக்காது. மேம்போக்கானதாக இருக்கும். மேல்மட்டத்தில்
நீ அதை சமாளிக்கலாம். அப்போது உன்னால் நான் சிரிப்பைப் பற்றி என்ன சொல்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ள முடியாது.
சிரிக்கும்போது உனது முழு உடலும் உனது முழு இருப்பும் அதில் ஈடுபடும்போது
அங்கே திடீரென ஒரு தரிசனம் தோன்றும். ஒரு கணம் கடந்த காலமும் மறையும்,
எதிர்காலமும் மறையும், ஆணவமும் மறையும், எல்லாமும் மறையும் - அங்கே சிரிப்பு
மட்டுமே இருக்கும். அப்படி சிரிப்பு மட்டுமே இருக்கும் அந்த கணத்தில் இந்த முழு இயற்கையும் சிரித்துக் கொண்டிருப்பதை உன்னால் பார்க்க முடியும்.

Read more...

Power of Media

Friday, August 13, 2010

A Servant enrolled his donkey in a race & won.

The Local news paper read:'SERVANT's ASS WON',


The king was so upset with this kind of publicity that he ordered the servant not to enter the donkey in next race..

 
Next day..the local paper headline read:'KING SCRATCHES SERVANT'S ASS'..


This was too much for the king, he ordered the servant to get rid of the donkey.He gave the donkey to the queen.

 
The local paper heading the news: "QUEEN HAS THE BEST ASS IN THE TOWN"


The king fainted.Queen sold the donkey to a farmer for 10$.

Next day paper read: "QUEEN SELLS HER ASS FOR $10.."


This was too much,King ordered the queen to buy back the donkey & lead it to jungle.


The next day Headlines: "QUEEN ANNOUNCES HER ASS IS WILD & FREE".


The king was buried next day..
Power of media...!!

Read more...

Intelligent or Innocence ???

Monday, September 21, 2009

A beautiful Madam was having trouble with one of her students in 1st Grade class.

Madam asked, "Boy, what is your problem?"


Boy answered, "I'm too smart for the first-grade. My sister is in the third-grade and I'm smarter than she is! I think I should be in the 4th Grade!"

Madam had enough. She took the Boy to the principal's office. While the Boy waited in the outer office, madam explained to the principal what the situation was. The principal told Madam he would give the boy a test and if he failed to answer any of his questions he was to go back to the first-grade and behave. She agreed.

The boy was brought in and the conditions were explained to him and he agreed to take the test.


Principal: "What is 3 x 3?"
Boy: "9".


Principal: "What is 6 x 6?"
Boy: "36".


And so it went with every question the principal thought a 4th grade should know. The principal looks at Madam and tells her, "I think Boy can go to the 4th grade."
Justify Full
Madam says to the principal, "I have some of my own questions. Can I ask him ?".
The principal and Boy both agreed.



Madam asks, "What does a cow have four of that I have only two of"?

Boy, after a moment "Legs."


Madam: "What is in your pants that you have but I do not have?"

Boy: "Pockets."



Madam: What starts with a C and ends with a T, is hairy, oval, delicious and contains thin whitish liquid?

Boy: Coconut


Madam: What goes in hard and pink then comes out soft and sticky?

The principal's eyes open really wide and before he could stop the answer, Boy was taking charge.

Boy: Bubblegum


Madam: What does a man do standing up, a woman does sitting down and a dog does on three legs?

The principal's eyes open really wide and before he could stop the answer...

Boy: Shake hands



Madam: You stick your poles inside me. You tie me down to get me up. I get wet before you do.

Boy: Tent



Madam: A finger goes in me. You fiddle with me when you're bored. The best man always has me first.

The Principal was looking restless, a bit tense and took one large Patiala Vodka peg.

Boy: Wedding Ring


Madam: I come in many sizes. When I'm not well, I drip. When you blow me, you feel good.

Boy: Nose



Madam: I have a stiff shaft. My tip penetrates. I come with a quiver.

Boy: Arrow


Madam: What word starts with a 'F' and ends in 'K' that means lot of heat and excitement?

Boy: Firetruck



Madam: What word starts with a 'F' and ends in 'K' & if u don't get it, u have to use your hand.

Boy: Fork



Madam: What is it that all men have one of it's longer on some men than on others, the pope doesn't use his and a man gives it to his wife after they're married?

Boy: SURNAME.


Madam: What part of the man has no bone but has muscles, has lots of veins, like pumping, & is responsible for making love ?

Boy: HEART.


The principal breathed a sigh of relief and said to the teacher,

"Send this Boy to IIM AHMEDABAD, I got the last ten questions wrong myself!".

Read more...

மாத்தி யோசி!!!

Saturday, June 20, 2009

An IDEA can change your Life ...
But, a Girl Can change Ur IDEA!!!!!!!!!!!!

Read more...

மற்றவர்கள் கருத்தை மாற்ற முடியுமா?

Friday, May 29, 2009

நன்றி: என்.கணேசன்

ஒரு புகழ்பெற்ற அரசியல் தலைவர் தன் நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த முல்லா "என்ன கழுதையுடன் வாக்கிங் போகிறீர்கள்?" என்று கிண்டலாகக் கேட்க தலைவருக்குக் கோபம் வந்து விட்டது.

"என்ன உனக்குக் கண் சரியாகத் தெரியவில்லையா? இது என் நாய்" என்றார்.

முல்லா தலைவரிடம் சொன்னார். "அது நாய் என்று எனக்குத் தெரியும். நான் கேள்வி கேட்டது அந்த நாயிடம்" என்றார்.

தலைவருக்கு தன்னைக் கழுதை என்று முல்லா பரிகாசம் செய்கிறார் என்று தெரிய சிறிது நேரம் தேவைப்பட்டது. எல்லோரும் தன்னை தலைவா என்று மரியாதையுடன் அழைக்கையில் முல்லா கழுதை என்கிறாரே என்று உடனே வெகுண்டு நீதிமன்றத்தில் முல்லா மீது வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி முல்லா ஒரு புகழ் பெற்ற தலைவரை கழுதை என்றழைத்தது தவறு என்றும் அந்தத் தலைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.

முல்லா நீதிபதியிடம் ஒரு சந்தேகம் கேட்டார். "ஐயா நான் கழுதையைத் தலைவா என்றழைப்பதில் சட்டத்தில் ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா?"

"இல்லை" என்றார் நீதிபதி.

சரி என்ற முல்லா அந்தத் தலைவரிடம் சென்று "தலைவா என்னை மன்னித்து விடுங்கள்"என்றார்.

Read more...

மாணவச் செல்வங்களை புத்திசாலிகளாக மாற்ற அரசு (புதுத்) திட்டம்!

Wednesday, May 6, 2009

கஷ்டமான பாடத்தை பாடத்திட்டத்திலிருந்து நீக்கியும், தேர்ச்சி விழுக்காட்டு மதிப்பெண்ணை குறைத்தும் மாணவர்களை அதிக மதிப்பெண் வாங்க வைக்கலாம். இதனால் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று புத்திசாலிகள் ஆகிவிடுவார்கள்!!!

நன்றி: The Hindu

Read more...

ஜென் குரு, குழந்தை புத்தர்

கிழக்கு பதிப்பகத்தின் நூல்களில் ஒன்றான (தோல்விகளைத் துரத்தி அடி - எழில் கிருஷ்ணன் - விலை ரூ 75.) என்ற நூலிலிருந்து...


அவர் ஒரு ஜென் குரு. ஜப்பானில் அவரைக் குழந்தை புத்தர் என்று சொல்வார்கள். அவருடைய பேச்சு, நடவடிக்கை எல்லாம் குழந்தைத்தனமாக இருக்கும். பக்குவம் அடைந்த ஞானிபோல பேசமாட்டார். நடந்துகொள்ள மாட்டார். யாராவது யோசனை கேட்டால் 'சீ போ' என்றுதான் சொல்வார். 'வர்றியா கிட்டிப்புள் ஆடலாம்' என்று ஏதாவதொரு விளையாட்டுக்கு அழைப்பார். என்ன வேண்டுமானாலும் வாங்கித்தருகிறேன் என்றால் திண்பண்டம் கேட்பார். அவருடைய விருப்பம் எல்லாமே குழந்தைத்தனமாக இருக்கும்.


பிறகு ஏன் அவரை ஞானி என்று சொன்னார்கள்?


அவர் வாழ்ந்த காலத்தில் அவர் கொண்டாடப்படவில்லை. அவர் மரித்தபிறகே அவருடைய வாழ்க்கையைக் கேள்விப்பட்டு அவரைக் கொண்டாட ஆரம்பித்தார்கள். அவர் வாழ்ந்த வாழ்க்கையைக் கொண்டே அவருடைய மகத்துவம் அறியப்பட்டது. இந்தக் கதையைப் பாருங்கள்.


மன்னர் ஒருநாள் அவரைப் பார்க்க வந்தார். குரு வெளியே அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருந்தார். மன்னர் குழம்பிப் போய்விட்டார். 'நான் தவறான நேரத்தில் வந்தேனாஎன்று குருவிடம் கேட்டார்.


'ஆமாம் நான் மிகவும் வேலையாக இருக்கிறேன்என்றார் குரு.


இவ்வளவு பெரிய ஞானி, யாரைப் பார்க்க வெளியே போகிறார் என்று மன்னர் தீவிரமாக யோசிக்கத் தொடங்கினார். குரு சந்திக்கப் போகும் நபர் நிச்சயம் பெரிய ஆளாக இருக்கக்கூடும் என்று அவர் நம்பினார். மன்னர் குருவைப் பின்தொடர ஆரம்பித்தார். அவர் உதவியாளர்கள் பின்தொடர்ந்தனர்.


குரு தலைதெறிக்க ஓடுகிறார். அவருக்குக் காயங்கள் ஏற்படுகின்றன. அவர் அளவுக்கு மன்னராலும் அவர் உதவியாளர்களாலும் வேகமாகச் செல்லமுடியவில்லை. திணறுகிறார்கள். குரு சுவரெல்லாம் தாண்டிச் செல்கிறார்.


இறுதியில் ஆற்றங்கரைப் பக்கத்தில் உள்ள நாணல் புதருக்குச் செல்கிறார். ராஜாவுக்குப் புரியவில்லை. அங்கே ஏழுட்டுக் குட்டிப் பயல்கள் கும்பலாக நின்றுகொண்டிருந்தனர். குருவைப் பார்த்ததும் கையசைத்தனர். பதிலுக்கு இவரும் சந்தோஷமாகக் சையசைத்தார்.


ராஜா குழம்பிப் போய் நின்றார்.


குட்டிப்பயல்களிடம், 'ஸாரிப்பா லேட்டாகிவிட்டதுஎன்கிறார் குரு.


ஒரு குட்டிபையன் குருவைக் கோபித்துக்கொள்கிறான்.


குரு அவனிடம், 'அதான் சொல்லிட்டேன் இல்லை. வேணும்னா தோப்புக்கரணம் போடறேன்என்று உடனே பத்துத் தோப்புக்கரணம் போடுகிறார்.


இப்போது ராஜாவுக்குக் கோபம் வந்தது. உலகமே நான் என்ன சொன்னாலும் அதற்குத் தலைவணங்கும். ஆனால் என்னை அவமதித்துவிட்டு இங்கே வந்து கொட்டம் அடிக்கிறாரே என்று குருமீது அடக்கமுடியாத கோபம் கொண்டார். .

குரு தொடர்ந்து அந்தச் சிறுவர்களைத் தாஜா செய்கிறார். பயல்களிடம், ’பச்சைக் குதிரை விளையாடலாமாஎன்று கேட்கிறார்.


அனைவரும் சாபூத்ரி போடுகிறார்கள் திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடுகிறார்கள். குரு வைக்கோல் போருக்குள் ஒளிந்து கொள்கிறார்.


ராஜாவால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை.


சிறுவர்கள் ஆறு பேரும் குருவைத் தேடோ தேடென்று தேடுகிறார்கள். மறைவில் நின்றுகொண்டு ராஜா அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.


மாலையாகிறது. இருட்டாகிவிடுகிறது. ராஜாவுக்குப் பசியெடுக்கிறது. கடுங்கோபத்துடன் அங்கே இருந்து கிளம்புகிறார். ராஜாவின் கட்டளையின்படி அவருடைய ஆள்கள் தொடர்ந்து குருவைக் கண்காணிக்கிறார்கள். குருவினுடைய விநோத நடவடிக்கைகள் பற்றி அடுத்த நாள் ராஜாவுக்கு ரிப்போர்ட் கொடுத்தாகவேண்டும்.


அடுத்தநாள் ராஜாவுக்குத் தகவல் வருகிறது. இரவு போய் காலையானபின்பும் குரு வைக்கோல் போரிலிருந்து வெளியே வரவில்லை.


ராஜா திடுக்கிட்டுப் போகிறார். மீண்டும் அந்த இடத்துக்கு ஓடுகிறார்.


குருவுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை அவர்களது பெற்றோர்கள் கூட்டிச் சென்றுவிட்டார்கள். ஆனால் குரு இன்னமும் வைக்கோல் போருக்குள்தான் இருக்கிறார் என்று ராஜாவுக்குத் தகவல் சொல்லப்படுகிறது..

'பிரியுங்கள்என்று ஆணையிடுகிறார் ராஜா. வைக்கோல் போரைப் பிரிக்கிறார்கள்.


உள்ளே குறுகிக்கொண்டு ஒளிந்துகொண்டிருக்கிறார் குரு. ராஜாவின் ஆள்கள் பிரிப்பதைப் பார்த்து 'ஐய்யோ, பிரிக்காதீங்க. பிரிக்காதீங்க. அந்தப் பசங்க என்னைக் கண்டுபிடிச்சுடுவாங்கஎன்கிறார்.


நன்றி: ச.ந.கண்ணன்

Read more...

TR The Terror | Comedy 2008

Thursday, April 23, 2009

Read more...

பருத்திவீரன் டக்ளஸ் காமெடி

Read more...

Saturday, April 11, 2009

நான் ஒரு கதை கேட்டிருக்கிறேன். கிராமத்திலுள்ள ஏழைப்பையன் ஒருவனுக்கு நேர்ந்தது அது. அவன் ஒரு பிச்சைக்காரனின் மகன். இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பான். அவன் எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருந்தான் என்றால், அரசனின் யானை வீதியில் செல்லும் போது, அவனால் அதன் வாலைப் பிடித்து அந்த யானையை நகரவிடாமல் செய்ய முடியும்.

சில சமயங்களில் அரசனுக்கே தர்மசங்கடமாகி விடும். ஏனெனில் அவ்ர் யானை மீது உட்கார்ந்து கொண்டிருப்பார், மந்தை முழுவதும் மக்கள் கூடி நின்று இக்காட்சியைப் பார்த்து சிரிப்பார்கள். எல்லாம் இந்த பிச்சைக்காரனின் மகனால் விளைவது.

அரசர் தன் மந்திரியை அழைத்தார். "ஏதாவதுசெய்தே ஆகவேண்டும். இது எனக்கு பெரிய அவமானம். கிராமத்தின் வ்ழியாக செல்வதற்கே நான் பயப்பட வேண்டியிருக்கிறது. அந்த பையன் சில சமயங்களில் வேறு கிராமங்களுக்கும் வந்து விடுகிறான்! எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அவன் யானையின் வாலைப் பிடித்து விடுகிறான், அதுவும் நகராமல் நின்று விடுகிறது. அந்தப் பையன் அதிக சக்தி வாய்ந்தவனாக இருக்கிறான். அவன் சக்தியை நீக்க ஏதாவது செய்தாக வேண்டும்"

மந்திரி கூறினார்: "நான் சென்று அறிவாளிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும். ஏனெனில் அவன் சக்தியை எப்படி நீக்க வேண்டும் என்று எனக்குத் தெரியாது. அவன் ஒரு பிச்சைக்காரன். அவன் கடை வைத்திருப்பவன் என்றால், அது அவன் சக்தியை உறிஞ்சி விடும். தொடக்கப்பள்ளீயில் அவன் ஒரு ஆசிரியராக இருந்தான் என்றால் அப்பொழுதும் அவன் சக்தி நீக்கப்பட்டு விடும். ஒரு அலுவலகத்தில் அவன் வேலை செய்தான் என்றாலும், அவன் சக்தி குறைந்து விடும். ஆனால் அவனுக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை. அவன் வேடிக்கைக்காக வாழ்கிறான், மக்கள் அவனை விரும்புகிறார்கள், அவனுக்கு உணவிடுகிறார்கள், அதனால் அவனுக்கு உணவிற்கும் பஞ்சமில்லை. அவன் மகிழ்ச்சியாயிருக்கிறான், சாப்பிட்டுவிட்டு தூங்குகிறான். அதனால் இது மிகவும் கடினம். ஆனாலும் நான் செல்கிறேன்."

அதனால் ஒரு வயதான அறிவாளியிடம் சென்றார்.

அவர் கூறினார்: "ஒன்று செய்யுங்கள். அந்தப் பையனிடம் சென்று நீங்கள் அவனுக்குத் தினமும் ஒரு தங்கக்காசு கொடுப்பதாகவும், அதற்காக அவன் ஒரு சிறிய வேலை செய்ய வேண்டும் என்றும் கூறுங்கள் - உண்மையிலேயே, அது சிறிய வேலைதான். அவன் கிராமத்திலுள்ள கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வைக்க வேண்டும். அவ்வளவுதான். நீங்கள் அவனுக்கு தினமும் ஒரு தங்கக்காசு தருவீர்கள்."

மந்திரி கேட்டார்: "ஆனால் இது எப்படி உதவும்? இது அவனை இன்னும் அதிக சக்தி படைத்தவனாக வேண்டுமானால் மாற்றலாம். ஒரு பணம் கிடைத்தவுடன் அவன் இன்னும் அதிகமாக சாப்பிடுவான். பிச்சை எடுப்பதைப் பற்றிக் கூட கவலைப்பட மாட்டான்."

அந்த அறிவாளி கூறினார்: "கவலைப்படாதீர்கள், நான் சொன்னதை மட்டும் செய்யுங்கள்."

அவ்வாறே செய்யப்பட்டது. அடுத்தவாரம், அரசர் கடந்து செல்லும் போது, அந்த பையன் யானையை நிறுத்த மயற்சித்து தோல்வியடைந்தான். அதனுடன் இழுத்துச் செல்லப்பட்டான்.

என்ன நடந்தது? கவனம் நுழைந்துவிட்டது. கவலை நுழைந்துவிட்டது. அவன் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் - ஒரு நாளின் இருபத்துநான்கு மணி நேரமும், கோயிலுக்கு சென்று, விளக்கேற்றி வைக்க வேண்டும் என்பதை, அவன் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். அது கவலையாக மாறி, அவன் முழு இருத்தலைப் பிரித்து விடுகிறது. தூங்கும் போது கூட அது மாலை என்பதைப் போல் கனவு கணத் தொடங்கி விடுகிறான்.

என்ன செய்து கொண்டிருக்கிறாய்? கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி விட்டு, உன் ரூபாயைப் பெற்றுக் கொள். பிறகு அவன் அந்தத் தங்க ரூபாய்களைச் சேகரிக்கத் தொடங்கிவிடுகிறான்.

ஏழு வைத்திருந்தான், இப்போது எட்டு, பிறகு இவ்வளவு நாட்களுக்குள் நூறு ரூபாய்கல்ளைப் பெற்றுவிட முடியும் என்ற கணக்குப் போட துவங்கி விடுவான் - பிறகு அது இருநூறாகும். கணக்கு வந்தவுடன் அங்கு வேடிக்கை மறந்து விடுகிறது. அதுவும் அவன் செய்ய வேண்டியது மிகச்சிறிய வேலைதான், விளக்கேற்ற வேண்டும். ஒரு நிமிட வேலைதான், அவ்வளவு கூட இல்லை, ஒரு கணத்தில் செய்துவிடக் கூடியது. ஆனால் அது கவலையாகி விட்டது. அது அவனது சக்தியை எல்லாம் நீக்கிவிட்டது.

-ஓஷோ

Read more...

Thursday, November 27, 2008

ஒரு முழுக்குடிகாரன் ரயில் பயணித்துக் கொண்டிருந்தான். உடல் முழுவதும் விஸ்கி மற்றும் இன்னபிற சாராய நெடிகள். உடைகள் அழுக்காக இருந்தன. அவன் குளித்து இரண்டு அமாவாசைகளாவது ஆகியிருக்கும் போல! அவன் ஆடைகளில் லிப்ஸ்டிக் கறைகள் இருந்தன. சட்டைப் பையில் பாதி குடித்துவிட்டு மிச்சம் வைத்திருந்த ஜின் பாட்டில் ஒன்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

ஆனால் அவன் சலமின்றி, அன்றைய செய்தித்தாள் ஒன்றைப் பிரித்துப் படித்துக் கொண்டிருந்தான்.

ரயிலில் கூட்டமில்லை.

எதிரில் சந்நியாசி ஒருவர் அமர்ந்து சக பயணியாக அவனுடன் பயணித்துக் கொண்டிருந்தார்.

சில நிமிடங்கள் சென்றிருக்கும், அவன் திடீரென்று சந்நியாசியை நோக்கிக் கேட்டான்.

"சுவாமி, மூட்டு வலி எதனால் வருகிறது?"

"எப்படிப்பட்ட மூட்டுவலி?" இது சாமியார்

"கை, கால்களை மடக்கி நீட்ட முடியாத - குறிப்பாக நடக்க முடியாத, ஏன் அடியெடுத்து வைக்க முடியாத அளவிளான மூட்டுவலி!"

அவர் உடனே, அவனுக்குப் பதில் சொன்னார்.

"மகனே, கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கைதான் அதற்குக் காரணம். அதிகமான குடி, அளவில்லாத பெண் சகவாசம், தினசரி, குளிக்கும் பழக்கமின்மை, சுகாதாரமில்லாத உணவுகளை உண்ணுதல் போன்றவைகள்தான் அதற்குக் காரணம்"

"நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்" என்று சொன்னவன், மறுபடியும் செய்தித்தாளில் மூழ்கி விட்டான்.

இப்போது, சாமியாருக்குச் சற்று வருத்தமாகிவிட்டது. அதிகப் படியான வார்த்தைகளைச் சொல்லி அவனைப் பயமுறுத்தி விட்டோமோ என்ற ஆதங்கம் ஏற்பட்டது.

உடனே அவனுடன் பேச ஆரம்பித்தார்.

"மூட்டுவலிக்கான காரணத்தை நான் கடுமையாகச் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன். கவலைப் படாதே! எத்தனை நாட்களாக உனக்கு மூட்டு வலி?"

அந்தக் குடிகாரன் மெல்லிய குரலில் பதில் சொன்னான்:

"எனக்கு எந்த வலியும் இல்லை சாமி. நம்மூர் ஆசிரமத்தில் உள்ள பெரிய சாமியாருக்குக் கடுமையான மூட்டுவலி என்று பேப்பரில் போட்டிருக்கிறான். அதனால்தான் கேட்டேன்"

நன்றி: பல்சுவை

Read more...

Wednesday, November 26, 2008




சர்தார்:
ஒரு தடவ தான் பஸ்ல போனேன், ஆன பஸ் ஓட்ட கத்துக்கிட்டேன்.

நண்பன்: எப்டிடா??

சர்தார்: ரெண்டு விசில் அடிச்சா பஸ் ஓடும், ஒரு விசில் அடிச்சா பஸ் நிக்கும்....

Read more...






தந்தை:
அப்பா சொல்றத கேக்கணும் இல்லனா உருப்பட முடியாது.

மகன்: அதுக்கு இப்ப பீல் பண்ணி என்ன பிரயோஜனம், தாத்தா சொல்லும் போதே கேட்டிருக்கனும்.

தந்தை: ???!!!

Read more...

Donate a Link for Green World - NGO

You can donate a link from your blog or website for Green World - NGO, A Non-Profit Social Welfare Organization functioning at Erode.
This is what you will see.



Optionally use this Widget installer to add this link to your blogger blog.

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP