Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

இறக்க முடியாத சிலுவை | வைரமுத்து

Sunday, April 4, 2010

Read more...

அரசு பள்ளி தத்தெடுப்பு திட்டத்தில் தொய்வு

Monday, October 12, 2009


நன்றி: தினமலர்

உள்ளூர் பகுதிகளைச் சேர்ந்த செல்வந்தர்கள், தொழிலதிபர்கள், தங்கள் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து தேவையான கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்கும் திட்டம், தற்போது தொய்வடைந்துள்ளது.

இதற்கு, அதிகாரிகளின் போதிய ஒத்துழைப்பின்மை மற்றும் ஐந்து லட்ச ரூபாய் கொடுத்தால், பள்ளிக்கு தாங்கள் விரும்பும் பெயர்களை சூட்டலாம் என்றிருந்த அரசாணை ரத்து போன்றவை, முக்கிய காரணங்களாக உள்ளன. தமிழகத்தில் இயங்கும் பள்ளிகளில், பெரும்பான்மையாக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் தான் உள்ளன. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு, முழுமையான உள் கட்டமைப்பு வசதிகளை அரசே செய்து கொடுப்பது என்பது சிரமம் தான்.

இதை அறிந்து தான், அரசுப் பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை உள்ளூர் வி.ஐ.பி.,க்கள் செய்து தரவும், அதற்காக பள்ளியில் நன்கொடையாளர்கள் விரும்பும் பெயரை வைத்துக் கொள்ளவும் அரசு அனுமதித்தது. இதனால், பலர் அரசுப் பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்தினர். கடந்த சில ஆண்டுகளாக இந்த திட்டத்தில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு, மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகளின் ஒத்துழைப்பின்மை முக்கியக் காரணமாக இருக்கிறது.

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முன்வரும் நன்கொடையாளர்களை, உரிய முறையில் அணுகாமல் அலைய விடுவதாலும், திட்டத்தில் போதிய ஆர்வம் காட்டாததாலும் இந்த திட்டம் தற்போது முடங்கிப் போயுள்ளது. அரசுப் பள்ளிகளுக்கு, ஐந்து லட்ச ரூபாய் நன்கொடை அளித்தால், அந்தப் பள்ளிக்கு நன்கொடையாளர் விரும்பும் பெயரை சூட்டலாம் என்று அரசாணை இருந்தது. இந்த அரசாணை ரத்து செய்யப்பட்டு விட்டதாக, பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்கொடை திட்டம் குறைந்துபோனதற்கு, இது ஒரு முக்கியக் காரணம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போதைய திட்டத்தின்படி, பள்ளிக்குத் தேவையான வகுப்பறைகள் அல்லது ஆய்வகங்கள் போன்ற வசதிகளை, நன்கொடையாளர்கள் செய்து தரலாம் என்றும், அந்த குறிப்பிட்ட அறைக்கு மட்டும் நன்கொடையாளர்கள் விரும்பிய பெயரை சூட்டலாம் என்றும் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளில், அரசுப் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில், நன்கொடையாளர்களின் பங்கு சொல்லும்படியாக இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அடுத்த கல்வியாண்டில் சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வரும் நிலையில், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. சமச்சீர் கல்வி திட்டம் குறித்து ஆய்வு செய்த முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன், "சமச்சீர் கல்வி என்பது வெறும் பாடத் திட்டம் மட்டும் கிடையாது;

அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில், சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றிலும், இந்தக் கருத்தை முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் உள்ளிட்ட கல்வியாளர்கள் வலியுறுத்தினர். பள்ளிகளில் எந்தவித வசதிகளும் இல்லாமல், பாடத் திட்டத்தை மட்டும் பொதுவாக வழங்கி விட்டால், அதனால் எந்தவித மாற்றங்களும் ஏற்படாது.

அரசுப் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் செல்வந்தர்களையும், தொழிலதிபர்களையும் பங்கேற்குமாறு அரசு வேண்டுகோள் விடுக்க வேண்டும். நன்கொடையாளர்கள் விரும்பும் பெயர்களை பள்ளிக்கு சூட்டவும், கூடுதல் கட்டடங்களுக்கு பெயர் சூட்டிக் கொள்ளவும் வழிவகை செய்ய வேண்டும். நன்கொடையாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு நினைத்தால், இந்த திட்டத்தை பெரிய அளவில் மக்களிடம் எடுத்துச் சென்று, அதன் மூலம் அரசுப் பள்ளிகளின் வசதிகளை கண்டிப்பாக மேம்படுத்த முடியும் என்ற கருத்து எழுந்திருக்கிறது.

Read more...

சிலேட்டை ஏந்தும் பிஞ்சுகள்.. பிளேட்டை ஏந்தி பிச்சை எடுக்குதே

Saturday, October 10, 2009

Read more...

புதிய தலைமுறை - நட்புடன் ஒரு பகிர்வு

Wednesday, September 30, 2009

நேற்று காலை நண்பர் ஒருவரை வழியனுப்பி வைக்க ஈரோடு ரயில் நிலையம் சென்றிருந்தேன். புத்தகக் கடையில் தொங்கவிடப்பட்டிருந்த நீளமான விளம்பர காகிதத்தில் "இளைஞர்களுக்கு வேண்டும் இட ஒதுக்கீடு, ஏழை மாணவர்களுக்கு உதவித் தொகை" என்ற வாசகங்களின் கீழ் "புதிய தலைமுறை" என்னைக் கவரவே, புரட்டிப்பார்க்கலாம் என்று அருகில் சென்றேன். செல்லும் போதே அநேகமாக விலை ரூ.10 ஆவது இருக்கும் நினைத்துக் கொண்டுதான் சென்றேன். ஆனால் புத்தகத்தின் முகப்பில் விலை ரூ.5 எனப் பார்த்ததும் சற்றும் யோசிக்காமல் வாங்கிவிட்டேன்.

'பெருகி வரும் பத்திரிக்கை எண்ணிக்கையின் மத்தியில் "புதிய தலைமுறை"யின் வருகைக்கு காரணம் என்ன? எதைச் சாதிக்க இந்த முயற்சி என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழலாம். பத்திரிக்கையின் பெயர் குறிப்பது போல, தமிழகத்தின் புதிய தலைமுறையின் முன்னேற்றத்திற்கு ஒரு உந்துகோலாகவும், அவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு தளமாகவும் விளங்கும் நோக்கத்துடன் இப்பத்திரிக்கை மலர்ந்திருக்கிறது. உலகிலேயே இளைஞர்கள் அதிகம் நிறைந்த நாடு இந்தியா. நம் நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் புதிய தலைமுறை இளைஞர்களுக்குச் சமூகம் சார்ந்த செய்திகளை எந்தச் சார்புமின்றி வழங்கவும், வளர்ச்சிக்கு வழிகாட்டவும், மாற்றத்திற்கான மனநிலையை உருவாக்கவும் இப்பத்திரிக்கை விழையும்.' என்ற புத்தக முகவுரை, மிகைப்படுத்தப் பட்டதல்ல நம்மால் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டதே என்ற உணர்வு சில பக்கங்களை புரட்டியதுமே எனக்கு ஏற்பட்டது.
பொதுவாகவே, ஆக்கபூர்வமான சிந்தனைக் கட்டுரைகள், ஊக்கம் தரும் கதைகள்;செய்திகள், பயனுள்ள தகவல்கள் போன்றவற்றை தேடிப் பிடித்து சேகரித்து வைத்துக் கொள்வது என் வழக்கம். அவற்றையெல்லாம் இங்கு பதிவிட போதுமான நேரம் வாய்க்கவில்லையே என்பது என் ஆதங்கம். ஆனால் அத்தகையதொரு அழகிய தொகுப்பாக இருக்கிறது "புதிய தலைமுறை". முற்றிலும் இளைஞர்களுக்கு தேவையான, அவசியமான செய்திகளை மட்டுமே ஆக்கபூர்வமான மாற்றத்துக்கான விதைகளாக வடிகட்டிக் கொடுத்திருக்கிறது என்றே கருதுகிறேன்.

உதாரணத்துக்கு,
  • பஸ் கூடப் போகாத கிராமப் பள்ளியில் கணினி, இணையம், ஒவ்வொரு மாணவனுக்கும் ஈமெயில் ஐ.டி. என "மாங்குடி மாறிய கதை"யும்
  • "அரசியலில் வளர முடியுமா?" என்ற கட்டுரையும் "இளைஞர்களுக்கு இட ஒதுக்கீடு!" என்ற கட்டுரையும் இந்தியாவின் ஜனத்தொகையில் 51 சதவீதம் இருக்கும் 25 வயசுக்குட்பட்ட இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை; சிந்திக்க வேண்டியவை.
  • "நான் விரும்பும் மாற்றங்கள்" பெட்டி செய்தி புத்தகம் முழுவதும் இளைஞர்களின் குரல்களை ஒலிக்கிறது.
நான் ஏதோ இந்த நற்செய்தியை பகிர்ந்து கொண்டாக வேண்டும் என்ற உந்துதலில் இட்ட பதிவுதான் இது. ஒரு அஞ்சு ரூபா கொடுத்து நீங்களே புத்தகம் வாங்கிப் படிச்சுப் பாருங்க, இன்னும் நிறைய இருக்கு!

அப்புறம், புதிய தலைமுறை
  • இளைஞர்கள் பத்திரிக்கையாளர் திட்டம் 2009,
  • மாணவர்களுக்கு சலுகை சந்தா,
  • படித்துக் கொண்டே பகுதி நேர வேலைவாய்ப்பு
ஆகியவற்றை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்குகிறது.

விகடன் பத்திரிக்கையாளர் திட்டம் போன்ற வாய்ப்புகளை நழுவ விட்டவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. 18 வயது முதல் 30 வயது வரையிலான மாணவர்கள், இளைஞர்கள் தகுதியானவர்கள்.

மேலும் விபரங்களுக்கு : http://puthiyathalaimurai.com

Read more...

செக்ஸ் கல்வி தேவையில்லை | ராஜ்யசபா கமிட்டி பரிந்துரை

Sunday, June 14, 2009

புதுடில்லி : பள்ளிகளில் செக்ஸ் கல்வி தேவையில் லை. அதற்கு பதில், திருமணத்துக்கு முந் தைய உடலுறவால் வரும் சிக்கல்களை எடுத்துரைக்கலாம் என ராஜ்யசபா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. உயர்நிலைப்பள்ளிகளில் செக்ஸ் கல்வி போதிக்க வேண்டும் என, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்தது. ஆனால், இந்த படிப்பை மக்கள் ஏற்றுக் கொண்டாலொழிய, பாடத்திட்டமாக இதை அமல்படுத்தக் கூடாது என பல தரப்பிலிருந்து மனு செய்யப்பட்டது. எனவே, இது குறித்து ஆராய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. பள்ளிகளில் செக்ஸ் கல்வி அவசியமா? என்பது குறித்து, பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு தலைமையில் ராஜ்யசபா கமிட்டி ஆய்வு செய்தது.

இந்த கமிட்டி கூறியுள்ளதாவது: பசி, தாகம், காமம் போன்றவை ஒவ்வொரு வருக்கும் இயற்கையாக அமைந்துள்ளது. எனவே, செக்ஸ் குறித்து பாடம் கற்பிக்க வேண் டிய அவசியமில்லை. அதற்கு பதில், செக்ஸ் உணர்வைக் கட்டுப்படுத்தும் விதத்தை பள்ளிகளில் போதிக்கலாம். சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு, நம் நாட்டு துறவி களின் போதனைகள் போன்ற வற்றை பாடத் திட்டத்தில் சேர்க்கலாம். கலாசார பாரம்பரியம் மிக்க நமது சமுதாயத்துக்கு செக்ஸ் கல்வி ஒத்து வராது. இவ்வாறு இந்த கமிட்டி தனது அறிக் கையில் தெரிவித்துள்ளது. திருமணத் துக்கு முன் உடலுறவு கூடாது என்பதை, எப்படி பள்ளி சிறுமிகளுக்கு விளக்குவது என் பதை இந்த கமிட்டி குறிப்பிடவில்லை.

நன்றி: தினமலர் ஜூன் 14,2009

Read more...

அரசுப் பள்ளிகளின் தரம் உயர வேண்டிய அவசியம்!

Sunday, May 31, 2009

இந்த பதிவுகளை படித்ததில், அரசுப் பள்ளிக் கூடங்களின் முக்கியத்துவமும் அதே சமயத்தில் அவற்றின் இன்றைய நிலையும் உணரமுடிகிறது.

1. கல்வியின் விலை - 1 - மெட்ரிகுலேஷன் / தனியார் பள்ளிகளின் மறுபக்கம்

"வலைபதிவர் ஒரு பள்ளிக்கூடம் நடத்த வேண்டுமென்றால் அந்த நிர்வாகம் பல துறைகளிடமிருந்தும் அங்கீகாரம் அல்லது அனுமதி பெற வேண்டும் என்பதிலிருந்து நிறைய தகவல்களோடு பல கோணங்களிலும் கல்வியை அலசியிருக்கிறார்.
2. ஐஐடி மாணவர் நமக்கு சூப்பர் ஸ்டார், அவருக்கு ‘சேகுவாரா’ ஒரு பாப்ஸ்டார்
  • ஐஐடிக்களை பற்றிய ஒரு பார்வை.
  • ஐஐடி கல்வி தரத்தை புரிந்து நம்மை உயர்த்திக்கொள்வது
என்ற நோக்கத்தில் "வலைபதிவர் அக்னிக்குஞ்சு" தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். பலரும் இவரது கருத்துக்கு உடன்பட்டு பின்னூட்டமிட்டு இருக்கிறார்கள். இவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் ஐ.ஐ.டி-யில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

3. தேர்வு

எழுத்தாளர் ஜெயமோகன், தேர்வு என்ற தலைப்பில் தன் மகனுடன் சேர்ந்து அனுபவித்த பள்ளிக் கல்வி பிரச்சனைகளையும், கல்வி பற்றிய நம் சமூகத்தில் ஏற்பட்டுள்ள கண்ணோட்டங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

    1. Read more...

      பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

      Friday, May 29, 2009



      நன்றி: கவிதைச் சாலை

      Read more...

      தமிழகத்தில் கல்வி | எழுத்தாளர் ஜெயமோகன்

      Thursday, May 28, 2009

      எழுத்தாளர் ஜெயமோகன், தேர்வு என்ற தலைப்பில் தன் மகனுடன் சேர்ந்து அனுபவித்த பள்ளிக் கல்வி பிரச்சனைகளையும், கல்வி பற்றிய நம் சமூகத்தில் ஏற்பட்டுள்ள கண்ணோட்டங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார். நான் வாசித்து விட்டு முடிக்கும் போது அரசுப் பள்ளிக்கூடங்கள் அணுகு முறையில் நன்றாக உள்ளதாகவே உணர்கிறேன். ஆனால் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என்பது வருந்தத் தக்க ஒன்று. இதைப் பற்றி அவர் பகிர்ந்து கொள்ளவில்லை. ஒருவேளை அவர் மகன் படிக்கும் அரசுப் பள்ளிக் கூடத்தில் எல்லா வசதிகளும் இருக்கலாம்.

      Read more...

      The girl who silenced the world for 6 minutes

      Wednesday, May 27, 2009


      Severin Suzuki Speaks at Rio in 1992

      "Hello, I’m Severin Suzuki, speaking for ECO, the Environmental Children’s Organization. We are a group of four twelve and thirteen year-olds from Canada trying to make a difference…


      We raised all the money ourselves to come 6,000 miles to tell you adults
you must change your ways.


      Coming here today I have no hidden agenda. I’m fighting for my future. Losing my future is not like losing an election or a few points in the stock market.


      I am here to speak for all future generations yet to come. I am here to
speak on behalf of the starving children around the world whose cries go unheard. I am here to speak for the countless animals dying across this planet because they have nowhere left to go.


      I am afraid to go out in the sun now because of the holes in the ozone.

      I
 am afraid to breathe the air because I don’t know what chemicals are in 
it.

      I used to go fishing in Vancouver, my hometown, with my dad, until just 
a few years ago we found the fish full of cancers. And now we hear about animals and plants going extinct every day—
vanishing forever.

      In my life, I have dreamt of seeing the great herds of wild animals, jungles, and rain forests full of birds and butterflies, but now I wonder if they will even exist for my children to see.


      Did you worry about these things when you were my age?

      All this is happening before our eyes, and yet we act as if we have all the time we want and all the solutions. I’m only a child and I don’t have all the solutions, but I want you to 
realise, neither do you!




      You don’t know how to fix the holes in our ozone layer.

      You don’t know how to bring the salmon back up a dead stream. You don’t know how to bring back an animal now extinct.

      And you can’t bring back the forests that once grew where there is now a
 desert.



      If you don’t know how to fix it, please stop breaking it!

      Here you may be delegates of your governments, business people, organizers, reporters, or politicians. But really you are mothers and fathers, sisters and brothers, aunts and uncles.

      And all of you are somebody’s child.

      I’m only a child, yet I know we are all a part of a family, five billion
strong—in fact, 30 million species strong. And borders and governments will never change that. I’m only a child, yet I know we are all in this together and should act as one single world toward one single goal.


      In my anger, I am not blind, and in my fear, I am not afraid to tell the world how I feel.


      In my country, we make so much waste. We buy and throw away, buy and throw away. And yet northern countries will not share with the needy.
      Even when we have more than enough, we are afraid to lose some of our wealth, afraid to let go.


      In Canada, we live the privileged life with plenty of food, water, and shelter. We have watches, bicycles, computers, and television sets. Two days ago here in Brazil, we were shocked when we spent time with some children living on the streets. And this is what one child told us:
 “I wish I was rich. And if I were, I would give all the street children food, clothes, medicine, shelter, love, and affection.”


      If this child on the street who has nothing is willing to share, why are we
 who have everything still so greedy? 
I can’t stop thinking that these children are my own age, that it makes a
tremendous difference where you are born.

      I could be one of those
children living in the favelas of Rio.



      I could be a child starving in Somalia, a victim of war in the Middle East, or a beggar in India. I’m only a child, yet I know if all the money spent on war was spent on
ending poverty and finding environmental answers, what a wonderful place this Earth would be.


      At school, even in kindergarten, you teach us how to behave in the world. You teach us not to fight with others, to work things out, to respect others, to clean up our mess, not to hurt other creatures, to
share, not be greedy. Then why do you go out and do the things you tell us not to do?


      Do not forget why you are attending these conferences, who you are doing this for—we are your children. You are deciding what kind of a world we will grow up in. Parents should be able to comfort their children by saying, "Everything’s going to be all right.” “We’re doing the best we can.”
“It’s not the end of the world.”


      But I don’t think you can say that to us anymore. Are we even on your
list of priorities? My dad always says, “You are what you do, not what you say.”
Well, what you do makes me cry at night. You grown-ups say you love us.

      I challenge you, please, make your actions reflect your words.
Thank you for listening."

      Thanks to ourcoolschool.com for text version of the speech.

      Read more...

      மாணவச் செல்வங்களை புத்திசாலிகளாக மாற்ற அரசு (புதுத்) திட்டம்!

      Wednesday, May 6, 2009

      கஷ்டமான பாடத்தை பாடத்திட்டத்திலிருந்து நீக்கியும், தேர்ச்சி விழுக்காட்டு மதிப்பெண்ணை குறைத்தும் மாணவர்களை அதிக மதிப்பெண் வாங்க வைக்கலாம். இதனால் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று புத்திசாலிகள் ஆகிவிடுவார்கள்!!!

      நன்றி: The Hindu

      Read more...

      அரசு பள்ளிகளை தத்தெடுக்க பலத்த ஆதரவு : குவிகிறது விண்ணப்பம்

      அரசுப் பள்ளிகளின் நிலை உண்மையில் மிகவும் வருந்தத்தக்க நிலையில்தான் இருக்கிறது. இதை நான் 12வது முடித்து விட்டு பிறகென்ன செய்வது என்று விழித்து விட்டு, பிறகு மீண்டும் படித்ததையே ஒருவருடம் டியூசன் உதவியோடு SELF IMPROVEMENT(இப்பொது இல்லை)போட்டு, ஒரு நல்ல அரசுப் பொறியியற்கல்லூரியில் சேர்ந்தபோது தான்... நாம் எவ்வளவு ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை உணரமுடிந்தது. நான் எங்கள் கிராமத்தில் உள்ள அரசு நடுனிலைப் பள்ளியிலும் மற்றும் அருகாமையில் உள்ள அரசு மேல்னிலைப்பள்ளியியிலும் படித்தேன்.

      இப்பவும் என்னைப் போன்றவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்க ஏதாவது வழிவகை உருவாகாதா என்ற ஏக்கமும் அதைப் பற்றிய தேடலும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அப்படி தேடியதில் கிடைத்த ஒரு ஆறுதல் செய்தியை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

      சுட்டி: http://www.dinamalar.in/pothunewsdetail.asp?News_id=11323&cls=&ncat=TN

      செய்தி:

      கோவை : தமிழக அரசு திட்டத்தின்படி, பள்ளிகளைத் தத்தெடுக்க தொழிலதிபர்கள் பலர் முன் வந்துள்ளனர். தமிழக கிராமங்களில் உள்ள பல அரசுப் பள்ளிகள் குடிநீர், கழிப்பறை, வகுப்பறை வசதிகள் இல்லாமல் உள்ளன. அரசுப் பள்ளிகளை ஒரு குறிப்பிட்ட காலம் வரை, தனியாருக்கு தத்து கொடுத்து, மேம்படுத்தும் திட்டத்தை, கோவையில் முதன்மைக் கல்வி அலுவலராகப் பணிபுரிந்த கார்மேகம் அறிமுகம் செய்தார். தற்போது, மேல்நிலைக் கல்விக்கான இணை இயக்குனராக சென்றபின், மாநிலம் முழுவதும் அத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

      குறிப்பாக, தொழிலதிபர்கள் அதிகமாக உள்ள கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இத்திட்டத்துக்கு வரவேற்பு பெருகி வருகிறது. கோவை கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் காந்திமாநகர் அரசு உயர்நிலைப் பள்ளிகளை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பிலும், கீரணத்தம், சின்னவேடம்பட்டி, குரும்பபாளையம், குன்னத்தூர், ஒரக்கால்பாளையம், சரவணம்பட்டி பகுதிகளில் உள்ள ஆறு அரசுப் பள்ளிகள் "சி.ஆர்.ஐ., பம்ப்ஸ்' நிறுவனம் சார்பிலும் தத்தெடுக்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

      மேலும், சில பள்ளிகளைத் தத்தெடுக்க விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. பள்ளிகளைத் தத்தெடுக்க விரும்புபவர்கள், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தம், ஐந்து ஆண்டுகளுக்கு செயல்திறன் உள்ளதாக இருக்கும். ஆய்வுக்குப் பின் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தை புதுப்பிக்க முடியும்.

      இத்திட்டத்தின் மாநில அளவிலான துவக்க விழா, மார்ச் 3ம் தேதி, கோவை ஜி.டி.நாயுடு அரங்கில் நடைபெற உள்ளது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செயலர் குற்றாலிங்கம், இயக்குனர் பெருமாள்சாமி, எஸ்.எஸ்.ஏ., கவுரவ ஆலோசகர் விஜயக்குமார் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

      நன்றி: தினமலர் (பிப்ரவரி 28,2009)
      சுட்டி: http://www.dinamalar.in/pothunewsdetail.asp?News_id=11323&cls=&ncat=TN

      Read more...

      வேட்பாளர் சரத்பாபு, புதிய நம்பிக்கை!

      Thursday, April 23, 2009


      சரத்பாபுவின் கேள்வி பதில் பேட்டி - தமிழில்

      சரத்பாபு மடிப்பாக்கத்தில் ஒரு குடிசையில் பிறந்தவர்! அவருடைய அம்மா மடிப்பாக்கத்தில் தெருவோரம் சிறு இட்லி கடை நடத்தியவர். நிர்வாக இயல் படிப்புக்கு பெயர் பெற்ற அகமதாபாத் IIM ல் MBA பட்டம் பெற்ற சரத்பாபு, புகழ் பெற்ற BITS- Pilani ல் Chemical Engineering பட்டமும் வாங்கியவர். இந்திய அளவில் இளைஞர்களின் போற்றுதலுக்குரிய அடையாளம் என்ற புகழ்ச்சி மிக்க ‘Pepsi MTV Youth Icon’ விருது பெற்றவர் சரத்பாபு.

      இதற்கு முன் Youth Icon விருது பெற்றவர்கள்…

      அனில் அம்பானி-2003

      ராகுல் திராவிட்-2004

      சாருக்கான் - 2005

      தோனி - 2006

      Orkut - 2007

      சரத் பாபு - 2008

      இவர் தென் சென்னை தொகுதியில் வேட்பாளராக போட்டி இடுகிறார்….

      சரத்பாபு பற்றி யூத் விகடனிலிருந்து...

      நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நமது 'யூத் ஐகான்' சரத்பாபுவின் முக்கிய இலக்கே, 2025-க்குள் 'பசியில்லாத இந்தியா'வை உருவாக்குவதுதான்!

      இளைஞர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் துணையோடு தென்சென்னையில் களமிறங்கும் சரத்பாபுவின் 10 முக்கிய அம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை இதுதான்...

      1. தென் சென்னையில் 20 ஆயிரத்துக்கும் மேலானோருக்கு அனைத்து வகையான தொழில்துறையிலும் வேலைவாய்ப்பு பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்.

      2. அனைத்துப் பகுதியிலும் தூய்மையானதும், சுகாதாரமானதுமான குடிநீர் வசதி. குறிப்பாக குடிசை, குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளிகள் ஆகியவை கருத்தில் கொள்ளப்படும். உலக சுகாதார நிறுவனத் தரத்துடன் அவசர சேவைகள் பெறுவதில் எளிதாக்கப்படும். பள்ளிகளின் நிலைகள் மேம்படுத்தப்படும்.

      3. மாநில அரசின் உதவித் திட்டங்களுடன் ஏழை மற்றும் ஊனமுற்ற மூத்தக் குடிமக்களுக்கு உணவு, வசிப்பிடம், சுகாதார வசதிகள் பெற வழிவகை செய்யப்படும்.

      4. ஒவ்வொரு வார்டிலும் ஒரு இளைஞர் நிலையம் (யூத் ஸ்டேஷன்) அமைக்கப்படும். இதுபோல் மொத்தம் 50 நிலையங்கள் அமைக்கப்பட்டு, குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றி எடுத்துரைக்கப்படும். இதன் மூலம் தென்சென்னையில் முறைகேடு, புகார்கள் போன்றவற்றை சரத்பாபுவிடம் நேரடியாக தொகுதி மக்கள் கொண்டு செல்ல வழிவகுக்கப்படும்.

      5. செல்பேசி சேவை நிறுவனங்களை அணுகி, இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.2,400 என்ற வாடகைக்கு இரண்டு மொபைல் ஃபோன்களுடன் சேவை வழங்கும் ஜாயின்ட் பேக்கேஜ் திட்டம் கேட்கப்படும். இது, மக்களுக்கு மாதம் ரூ.100 வாடகை செலவு மட்டும் ஆகும் வகையிலேயே வழங்க முயற்சிக்கப்படும்.

      6. பாதுகாப்பான போக்குவரத்துக்கு வழிவகை செய்யும் நோக்கத்தில், சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். மக்கள் பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்வதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

      7. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்பு உணர்வு ஏற்படும் வகையில், குடியுருப்பு நலச் சங்கங்கள் முதலிய அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்புரிவேன். அதன் வாயிலாக, தென் சென்னை தொகுதியில் நாளொன்றுக்கு 60 மரக்கன்றுகள் நடப்படும். ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 1,08,000 மரங்கள் நடப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

      8. மகளிர் மேம்பாட்டுக்கென அனைத்து இல்லத்தரசிகளுக்கும் வங்கிக் கணக்கு துவக்கப்படும். வீட்டில் உள்ள பெண்கள் வருவாய் ஈட்டும் வகையில் நல்ல வாய்ப்புகளும் திட்டங்களும் அறிமுகப்படுத்துவேன். இந்தத் திட்டத்தில் நான் நேரடியாகவே ஈடுபடுவேன்.

      9. கணினி போன்ற தொழில் நுட்பத்தின் துணை கொண்டு இளம் தலைமுறையினரின் கல்வித் திறனை மேம்படுத்துவேன். இரண்டு ஆண்டுகளில் 80% கணினி அறிவு எட்டப்படுவதே இலக்கு. இதற்கென பயிற்சி நிலையங்கள் அமைக்கும் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். ஆசிரியர்களின் உதவியுடன் கல்வித் திட்டத்தின் தரம் உயர்த்தப்படும்.

      10. இரு வழி தொடர்பு முறை மூலம் நமது தொகுதியிலுள்ள ரேஷன் வினியோக குறைபாடுகள், வேளச்சேரியில் வெள்ளத் தேக்க பிரச்னை, பெருங்குடியில் குப்பை மேடுகள் மிகுதியாவது போன்ற அனைத்து பகுதியிலுள்ள பிரச்னைகளுக்கும் தேர்வு காணப்படும். அதாவது, எல்லா வித பிரச்னைகளையும் என்னிடம் நேரடியாக தெரிவித்து தீர்வு காணப்படும்.

      வேட்பாளர் சரத்பாபு, புதிய நம்பிக்கை!


      பள்ளி மாணவர்களுடன் தன் வாழ்க்கை குறிப்புகளை பகிர்ந்து கொள்ளும் காட்சிகள்...





      சரத் பாபு அவர்களின் Orkut Profile
      சரத் பாபுவின் இணையதளம்
      சரத்பாபுவின் கேள்வி பதில் பேட்டி - தமிழில்

      Comments about Sarath in Some Blogs:

      1.Globens Blog

      2.சுட்டி குரங்கு

      3.Youthful Vikatan

      4.Idlyvadai

      5.Kanna

      6.Paravaigal pala vitham

      7. நெல்லைக் கிறுக்கன்

      8. Suresh Stories

      9. rammohan1985

      10. லக்கிலுக் ஆன்லைன்


      சரத்பாபுவின் கேள்வி பதில் பேட்டி - தமிழில்

      Read more...

      TR The Terror | Comedy 2008

      Read more...

      Touching!

      Read more...

      Lead India TOI

      Read more...

      வேதம் புதிது சிறந்த காட்சிகள்



      Read more...

      மெளனம் பேசியதே அதிரடி அட்வைஸ்

      Read more...

      Donate a Link for Green World - NGO

      You can donate a link from your blog or website for Green World - NGO, A Non-Profit Social Welfare Organization functioning at Erode.
      This is what you will see.



      Optionally use this Widget installer to add this link to your blogger blog.

        © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

      Back to TOP