Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

இணையத்தின் மூலம் தொழில் முனைவோர் பயிற்சி

Thursday, March 4, 2010

இளைஞர்களை சுய வேலைவாய்ப்புக்கு ஊக்குவிக்க அவர்களுக்கு பல்வேறுபட்ட நிர்வாகத் திறமைகளை, இணையத்தின் உதவியோடு அளித்து, அதன் மூலம் பல இளைஞர்களை தொழில் தொடங்க வழிவகை செய்து, பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் பெருமளவிலான மக்களை அவர்களுக்கு ஏற்றவாறு சிறந்த முறையில் பயிற்சியளைத்து, சுயமாக நம்பிக்கையுடன் தொழில் தொடங்க உதவுகிறோம்.
சமீபத்தில் தொழில் நேசன் இதழில் இந்த விளம்பரத்தைப் பார்த்தேன். சொந்தமாக தொழில் தொடங்க இருப்பவர்களுக்காக பிரத்யூகமான பயிற்சியை இந்திய அரசின் சான்றிதழோடு தமிழில் கற்றுத்தருகிறார்கள். தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கு யாரை அணுகுவது, நடைமுறை தகவல்களை எவ்வாறு அறிந்து கொள்வது, எப்படி முறைப்படி பதிவு செய்து கொள்வது, எந்த வகையின் கீழ் நம் தொழிலை பதிவு செய்வது, அரசின் சலுகைகள் உதவிகள் என்னென்ன? போன்ற அனைத்து கேள்விகளுக்கும் இந்த பயிற்சியில் தெளிவு கிடக்கும் என்று நான் நினைக்கிறேன். மேலும் விபரங்களை தெரிந்து கொள்ள www.edponline.in இணையதளத்தைபாருங்கள்.

Read more...

டீம் எவரெஸ்ட்

Friday, February 5, 2010

சமீபத்தில் புதிய தலைமுறையில் டாக்டர். அப்துல் கலாமின் இளைய இந்தியா தொடரில் செயல்வீரர்கள் என்ற வரிசையில் "எவரெஸ்ட் டீம்" பற்றிய கட்டுரையை படித்தேன். மிகவும் அருமையான சேவை செய்கிறார்கள் இவர்கள். படித்துப் பாருங்கள்...

எவரெஸ்ட் என்பது உலகின் உயர்ந்த சிகரம். மலையேறும் வீரன் சிகரத்தைத் தொட்ட மகிழ்ச்சிக்கு இணையான மகிழ்ச்சி, ஏதேனும் சிறு உதவியை மற்றவர்களுக்கு செய்துப் பார்த்தாலும் கிடைக்கும். எனவேதான் உயர்ந்த உள்ளங்களின் சங்கமமான இந்த அமைப்புக்கும் ‘எவரெஸ்ட்’ என்று பெயர்.

சுமார் மூவாயிரத்து ஐநூறு பேர் இவ்வமைப்பில் தங்களை தன்னார்வலர்களாக இணைத்துக் கொண்டு சமூகத்துக்கு, தங்களால் ஆன பங்களிப்பினை செய்துவருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள்.

எவரெஸ்ட்டுக்கு என்று அலுவலகம் கூட கிடையாது. ஒருவரை ஒருவர் இவர்கள் பெரும்பாலும் சந்தித்தது கூட இல்லை. இண்டர்நெட்தான் இவர்களை ஒருங்கிணைக்கிறது. யாருக்காவது உதவி தேவை என்பதை அறிந்தால், உடனடியாக இண்டர்நெட்டில் தங்கள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். அச்சமயத்தில் இயன்றவர்கள் உடனடியாக பங்களிக்கிறார்கள். அவ்வப்போது இவர்களில் சிலர் ஒன்றுகூடி களச்சேவையும் செய்வதுண்டு.
கட்டுரையாசிரியரின் இணையதளத்தில் மேலும் படிக்க இங்கு கிளிக் பண்ணுங்க.
 
மேலும் சில இணைப்புகள் - இணையத்தில் தேடிய போது கிடைத்தவை இவை:

கிழக்கு பதிப்பக எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி அவர்களின்  எவரெஸ்ட் டீம் பற்றிய பதிவு
http://thoughtsintamil.blogspot.com/2009/09/blog-post_27.html

எவரெஸ்ட் டீம் நிறுவனர் கார்த்தீபனின் சமூக இணையதள பக்கம்
http://ngogateway.com/ngo-profiles/kartheeban-chandramohan-team-everest/

டீம் எவரெஸ்ட் வலைப்பூ
http://teameverest.wordpress.com

Read more...

உலகின் இளம் தலைமையாசிரியர்!

Monday, October 19, 2009

நன்றி: தினமணி

கோல்கத்தா, அக். 18:
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவருக்கு "உலகின் இளம் தலைமையாசிரியர்' என்று புகழாரம் சூட்டியிருக்கிறது பி.பி.சி.

பி.பி.சி. செய்தி நிறுவனம் "கற்றுக்கொள்ளும் வேட்கை' என்ற பெயரில் புதிய செய்தித் தொடர் ஒன்றை தொடங்கியுள்ளது. உலகெங்கும் மிக மோசமான சூழல்களுக்கு இடையிலேயும் கற்றுக்கொள்ளும் வேட்கையோடு செயல்படுபவர்களை உலகுக்கு அடையாளம் காட்டும் நோக்கோடு இத்தொடரை பி.பி.சி. வெளியிடுகிறது.

இத் தொடரின் முதல் செய்தியாக மேற்கு வங்கத்தின் மூர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவர் பாபர் அலி நடத்தும் பள்ளிக்கூடத்தைப் பற்றி பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. உலகெங்கும் இன்னமும் கோடிக்கணக்கான பிள்ளைகளுக்கு கல்வி ஒரு பெருங்கனவாகத்தான் இருக்கிறது.

பள்ளிக்கூடங்கள், மதிய உணவு, சீருடைகள், கல்வி உதவித்தொகை என்று பல்வேறு சலுகைகளை அரசுகள் அளித்தாலும்கூட மோசமான வறுமை கோடிக்கணக்கான குழந்தைகளை இன்னமும் இளம் தொழிலாளர்களாகவே வைத்திருக்கிறது. இப்படிப்பட்ட மோசமான ஒரு சூழலிலிருந்து வெளிவந்திருப்பவர்தான் பாபர் அலி (16).

குடும்பத்தின் முதல் மாணவரான பாபர் அலி தன்னுடைய வீட்டிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள ராஜ் கோவிந்தா பள்ளியில் படித்துவருகிறார். இது ஓர் அரசுப் பள்ளி என்பதால், பாபர் அலிக்குப் பெரிய அளவில் செலவுகள் ஏதுமில்லை. ஆனால், பிறரைப்போல குடும்பச் சுமையைப் பகிர்ந்துகொள்ளாததோடு, குடும்பத்தினருக்கு மேலும் ஒரு சுமையைத் தரும் வகையில், தான் படிக்க வந்திருப்பதே ஒரு பெரிய காரியம்தான் என்கிறார் பாபர் அலி.

அவர் சொல்வது உண்மைதான். பாபர் அலி பகுதியைச் சேர்ந்த - அவர் வயதை ஒத்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஒவ்வொரு நாளும் ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் கிடைக்கும் வேலையைச் செய்து குடும்ப பாரத்தைச் சுமக்கும் துர்பாக்கியமான நிலையிலேயே இருக்கின்றனர். ஆகையால், தனக்கு தன் குடும்பம் அளித்த மிகப் பெரிய கொடையாக பள்ளிக்கூட வாய்ப்பைக் கருதிய பாபர் அலி கல்வியில் மிகச் சிறந்த மாணவராகத் திகழ்கிறார்.

ஆனால், பாபர் அலிக்கு பி.பி.சி. புகழாரம் சூட்ட காரணம் ராஜ் கோவிந்தா பள்ளியின் சிறந்த மாணவராக அவர் திகழ்வதற்காக அல்ல. பாபர் அலி விளையாட்டாகத் தொடங்கிய இன்னொரு காரியத்துக்காக. அதாவது, அவர் விளையாட்டாகத் தொடங்கிய பள்ளிக்கூடத்துக்காக. அப்போது பாபர் அலிக்கு வயது 9. நம் வீட்டுப் பிள்ளைகள் விடுமுறை நாள்களில் "டீச்சர் விளையாட்டு' விளையாடுவதுபோல தன் வீட்டில் ஒரு நாள் "டீச்சர் விளையா'ட்டைத் தொடங்கினார் பாபர் அலி.

டீச்சர் - பாபர் அலி. மாணவர்கள் யார் என்றால், அங்குள்ள பிள்ளைகள். அதாவது, முன்னெப்போதும் பள்ளிக்கூடத்துக்கே சென்றிராத ஏழைப் பிள்ளைகள். விளையாட்டு எல்லோருக்கும் பிடித்துப்போனது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விளையாடத் தொடங்கினார்கள். விளையாட்டு ஒரு கட்டத்தைத் தாண்டியபோதுதான் தெரிந்தது பாபர் அலிக்கு, தன் சக நண்பர்களின் ஆர்வம் விளையாட்டின் மீதானது மட்டுமல்ல, கல்வியின் மீதானதும் என்று.

பாபர் அலி தன்னுடைய விளையாட்டுப் பள்ளிக்கூடத்தை உண்மையான பள்ளிக்கூடமாக மாற்றினார். ஒரு புதிய வரலாறு அங்கு உருவாகத் தொடங்கியது. சொன்னால், பிரமித்துப்போவீர்கள். இப்போது பாபர் அலியின் பள்ளிக்கூடத்தில் எத்தனைப் பேர் படிக்கிறார்கள் தெரியுமா? 800 பேர்!

பாபர் அலி நடத்தும் இந்தப் பள்ளிக்கூடம் முற்றிலும் வித்தியாசமானது. பாபர் அலியின் வீட்டு முற்றம், வீட்டைச் சுற்றியுள்ள கொட்டகைகள், மரத்தடிகளே இந்தப் பள்ளிக்கூடம். களிமண்ணில், கட்டாந்தரையில் என்று கிடைக்கும் இடங்களில் அமர்ந்து பாடம் கற்கிறார்கள் மாணவர்கள். ஆசிரியர்கள்? பாபர் அலியும் அவருடன் படிக்கும் சில நண்பர்களும்தான்.

ஒவ்வொரு நாளும் தான் பள்ளிக்கூடம் சென்று வந்த பின்னர், இந்தப் பள்ளிக்கூடத்துக்கு மணியடிக்கிறார் பாபர் அலி. மணியோசை கேட்டதும் ஓடி வருகின்றனர் பிள்ளைகள். பொருளாதார ரீதியாக மிக மோசமான நிலையிலுள்ள மூர்ஷிதாபாத் பகுதியில் மிகக் குறுகிய காலத்தில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கிறது பாபர் அலியின் இந்தப் பள்ளிக்கூடம்.

மாற்றங்களுக்கு ஓர் உதாரணம் சம்கி ஹஜ்ரா (14). இந்தச் சிறுமி தன் தந்தை மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறார். சம்கியின் தந்தை ஊனமுற்றவர். எந்த வேலைக்கும் செல்ல இயலாத நிலையில் இருக்கிறார். பாட்டியும் அப்படியே. சம்கி அருகிலுள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து ஈட்டும் சொற்பத் தொகையிலேயே இந்தக் குடும்பம் வாழ்கிறது.

பள்ளிக்கூடத்தை ஒருபோதும் அறிந்திராத சம்கி ஒரு நாள் விளையாட்டாக பாபர் அலியின் பள்ளிக்கூடத்துக்குச் சென்றார். இன்றோ முறையான பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவிகளுக்கே சவால் விடும் வகையில் இவர் படித்து வருகிறார். பாபர் அலி தனக்கு கல்வி கொடுத்த கடவுள் என்று குறிப்பிடுகிறார் சம்கி.

சரி. பாபர் அலி அப்படி என்னதான் பாடம் நடத்துகிறார்? ""நான் என் ஆசிரியர்களிடம் கேட்பதை இவர்களுக்கு அப்படியே சொல்கிறேன்; அவ்வளவுதான்'' என்கிறார் பாபர் அலி. தான் விரும்பும் சமூக மாற்றத்தை தன்னிலிருந்து தொடங்கிய பாபர் அலி மகத்தான மனிதன் என்று கொண்டாடுகிறது பி.பி.சி.

உலகின் இளம் தலைமையாசிரியர் இவரே என்றும் பிரகடனப்படுத்துகிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மூர்ஷிதாபாத்தின் இந்த இளம் தலைமையாசிரியருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. பொருத்தமானதுதானே!

Read more...

சமச்சீர் கல்வி மெட்ரிக் பள்ளிகளுக்கு எதிரானது அல்ல: தங்கம் தென்னரசு

Wednesday, October 14, 2009

நன்றி: தினமணி

சென்னை, அக். 13:
"சமச்சீர் கல்வி முறை மெட்ரிக் பள்ளிகளுக்கு எதிரானது அல்ல' என்று பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.

தமிழ்நாடு மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் "சமச்சீர் கல்வித் திட்டத்தின் சிறப்புகள்' குறித்த விளக்கக் கூட்டம் சென்னை பழஞ்சூரில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பன்னாட்டு உறைவிடப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடந்தது.

இதில் பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது:

சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல்படுத்துவது தமிழக அரசின் கொள்கை முடிவாகும். இது மெட்ரிக் பள்ளிகளுக்கு எதிரான முடிவு அல்ல. சுதந்திரத்திற்கு முன்பு குறிப்பிட்ட சாரர் மட்டுமே கல்வி பெற்று வந்தனர். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கல்வி உரிமை சில காரணங்களால் மறுக்கப்பட்டது.

அடித்தட்டு மக்களுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என்று காமராஜர் பல முயற்சிகளை எடுத்தார்.

இன்று தமிழகத்தில் 1 கிலோ மீட்டர் தொலைவுக்குள் ஒரு தொடக்கப்பள்ளி உள்ளது. 5 கிலோ மீட்டர் தொலைவுக்குள் ஒரு உயர்நிலைப் பள்ளியும், 7 கிலோ மீட்டர் தொலைவுக்குள் ஒரு மேல்நிலைப் பள்ளியும் உள்ளது.

தென் மாவட்டத்தில் உள்ளவர்கள் கல்வியில் வளர்ச்சி காண அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கிறிஸ்தவ பள்ளிகளின் பங்கு மிக முக்கியமானது.

மனித வள மேம்பாட்டு குறியீட்டில் நாட்டிலேயே தமிழகம் 3-ம் இடம் பிடித்துள்ளது. இந்த மேம்பாட்டுக்கு அடிப்படையாக இருப்பது கல்வி தான். மெட்ரிக் பள்ளிகளை ஒதுக்கிவிட்டு சமச்சீர் கல்வியைக் கொண்டு வரவில்லை.

சமூக நீதி மற்றும் ஏற்றத்தாழ்வை நீக்க வேண்டுமெனில் கல்விதான் முக்கியப் பங்காற்றுகிறது. ஏற்றத்தாழ்வுகளை நீக்கக்கூடிய ஆயுதமாகக் கல்வி விளங்குகிறது. கல்வி முறையிலும் ஏற்றத்தாழ்வு உண்டு.

சமூக நீதியை நிலைநாட்டுவதற்கும், நமது எதிர்கால சந்ததியினரை முன்னேற்றவும் ஒரேவகையான கல்வித்திட்டத்தைக் கொண்டு வருவது அவசியமாகும்.

ஆங்கிலம் தொடரும்...: மெட்ரிக் பள்ளிகளில் ஆங்கிலம் அப்படியே தொடரும். மொழி சிறுபான்மை பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வரும் தெலுங்கு, உருது ஆகிய மொழிகளை அவரவர் மொழிகளிலேயே படிக்கலாம். அனைத்து குழந்தைகளுக்கும் எவ்வித மன உளைச்சல் இல்லாத வகையிலும், சிந்தனை திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையிலும், பாடச்சுமையைக் குறைக்கும் வகையிலும் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மெட்ரிக் பள்ளியில் உள்ள நல்ல அம்சங்கள், கருத்துக்களை உள்ளடக்கிய வகையில் சமச்சீர் கல்வி திட்டம் அமைய வேண்டும். மெட்ரிக் பள்ளிகளும் அரசுக்கு, ஆலோசனைகளை வழங்க முன்வர வேண்டும்.

மெட்ரிக் பள்ளி இயக்குநரகம்: தமிழகத்தில் சுமார் 3,600 மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகள் நிர்வாகம், கட்டமைப்பைக் கண்காணிக்க வேண்டி இருப்பதால் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அப்படியே தொடரும்.

அக்.15-ல் வரைவுப் பாடத்திட்டம் வெளியீடு: வரும் அக்டோபர் 15-ம் தேதி வரைவுப் பொதுப் பாடத்திட்டம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு பாடநூல் கழக நிறுவனத்தின் மூலமே அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள் வழங்கப்படும். மெட்ரிக் பள்ளிகளுக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்குவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார். தமிழ்நாடு மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ராஜசேகரன், செயலாளர் என்.விஜயன், செயின்ட் ஜான்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் கிஷோர்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more...

ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்., பயிற்சி்

நன்றி: தினமலர்

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை இளைஞர் நலத்துறை சார்பில் நடக்க உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல்நிலை தேர்வு பயிற்சிக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இதற்கான நுழைவுத் தேர்வு அக்., 26ம் தேதி நடைபெறும். விருப்பமுள்ளோர் பெயர், கல்வித் தகுதி, வயது, பிறந்த தேதி, முகவரி மற்றும் தற்காலிக பட்டச் சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்கலாம். ரூ. ஐந்து மதிப்பில் ஸ்டாம்ப் ஒட்டிய 2 தபால் உறைகளை இணைத்து அனுப்ப வேண்டும். இயக்குனர்/ஒருங்கிணைப்பாளர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு பயிற்சி, இளைஞர் நலத்துறை, மதுரை காமராஜ் பல்கலை, பல்கலைநகர், மதுரை-21 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்ப உறையின் மேல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பயிற்சிக்கான விண்ணப்பம் என எழுதி அக்.,21க்குள் அனுப்ப வேண்டும் என இயக்குனர் பி.செல்லதுரை தெரிவித்துள்ளார்.

Read more...

பள்ளி ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் ஆங்கில பயிற்சி

நன்றி: தினமலர்

கோவை: பிரிட்டிஷ் கவுன்சில் பயிற்சி பெற்ற ஆசிரியர் பயிற்றுனர்கள் தாங்கள் சார்ந்துள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

மதுக்கரை ஒன்றியப் பள்ளி ஆசிரியர்களுக்கு நடந்த பயிற்சி முகாமில் ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர். அரசுப் பள்ளி மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்துவது தொடர்பாக, பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ‘யுனிசெப்’ நிதியுதவியுடன் பிரிட்டிஷ் கவுன்சில் ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் பயிற்சி அளித்து வருகின்றனர்.

கோவையில் இரு கட்டங்களாக நடைபெற்று வந்த இப்பயிற்சி கடந்த மாதம் நிறைவு பெற்றது. பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்களும் கண்காணிப்பாளர்களும், தாங்கள் சார்ந்துள்ள பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு தற்போது பயிற்சி அளித்து வருகின்றனர்.

மதுக்கரை ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஆசிரியர்களுக்கு, மலுமிச்சம்பட்டி வட்டார வளமையத்தில் பயிற்சி நடைபெற்றது. ஐந்தாம் வகுப்பு பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, மாணவர்களின் கற்றல் திறன் வளர்ச்சி அடைய ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய கற்பித்தல் முறைகள் பற்றி இதில் பயிற்சி அளிக்கப்பட்டது.

பங்கேற்ற ஆசிரியர்கள் தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு, கற்றல் திறன் மேம்படுத்துவது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடிந்ததும் ஆசிரியர்கள் வட்டமாக அமர்ந்து ஆங்கிலத்தில் விவாதித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சரோஜினி தலைமையில் ஆசிரியர் பயிற்றுனர்கள் வனிதா, சுமதி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

Read more...

சமச்சீர் கல்வி திட்டத்தில் தமிழுக்கு முக்கியத்துவம்

நன்றி: தினமலர்

தமிழகத்தில் அடுத்தாண்டு முதல் அமல்படுத்தப்படவுள்ள சமச்சீர் கல்வித் திட்டத்தில் தமிழ் பாடங்கள் எளிமைப்படுத்தப்படவுள்ளன.

பிற பாடங்களைப் போல் தமிழ் பாடத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற வைத்து, மொத்த மதிப்பெண்களை எளிதில் உயர்த்தவே இந்த நடவடிக்கை என சமச்சீர் கல்வி கமிட்டியில் இடம் பெற்றுள்ள சிலர் தெரிவித்தனர். தமிழகத்தில் தற்போது நான்கு கல்வி முறைகள் உள்ளன. நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத இந்த வேறுபாட்டை நீக்கி, பொதுவான கல்வி முறையை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி தற்போது ஒவ்வொரு பாடத்திலும் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள், கல்வியாளர்கள் அடங்கிய குழுவினர் பாடத்திட்ட தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். புதிய பாடத்திட்டத்தில் தமிழ் பாடத்தை எளிமையாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது பல மெட்ரிக் பள்ளிகளில் பிரெஞ்சு, சமஸ்கிருதம் உள்ளிட்ட பிற மொழிகள் முதல் பாடமாக கற்பிக்கப்படுகிறது. இந்த பாடங்களில் அதிக மதிப்பெண் பெறுவது எளிது என்பதால், இதன் மூலம் அதிக மாணவர்களை நூறு சதவீத மதிப்பெண் பெற வைக்க பள்ளிகளும் பெற்றோரும் இம்மொழிகளை படிக்க வலியுறுத்தி வருகின்றன.

இதற்கு நேர்மாறாக தமிழ் பாடத்தில் இலக்கணம் உள்ளிட்ட பகுதிகள் மிகவும் கடினமாகவும், படிக்கும் மாணவனுக்கு பாடத்தில் பிடிப்பு ஏற்படாமலும் செய்கிறது. இதனால் தமிழ்நாட்டில் படிக்கும் தமிழ் மாணவர்களால் தமிழில் கூட நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற முடியாத அவலநிலை உள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள சமச்சீர் கல்வி மூலம் இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் தமிழ் பாடத்தை மிகவும் எளிமையானதாக மாற்ற பாடநூல் வல்லுனர்களுக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இனி வரும் ஆண்டுகளில் மாணவர்களை தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த முக்கிய மாற்றம் காரணமாக தமிழக மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பிரெஞ்சு, சமஸ்கிருதம் போன்ற பிற மொழிகளை படிப்பதை விட்டு தமிழுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் நிலை உருவாகும். இதே போல் வரலாற்றுப் பாடங்களும் எளிமைப்படுத்தப்படவுள்ளன.

பிற புதிய மாற்றங்கள்: புதிய பாடத் திட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது, சுற்றுச்சூழல் சீர்கேடுகளை தடுப்பது, குறைந்து வரும் மழை, உணவு கலப்படம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது. உடல் நலம், சுகாதாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பகுதிகள் கூடுதலாக சேர்க்கப்படவுள்ளன. பாடங்களை மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறை மாற்றப்பட்டு, செயல்பாட்டு முறையில் பாடங்கள் அமைக்கப்படவுள்ளன.

புதிய பாடத்திட்டம், என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டம் போல், தேசிய அளவில் மாணவர்களின் போட்டியிடும் திறனை மேம்படுத்துவதாக அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட முக்கிய தேர்வுகளுக்கான கேள்விகளை டில்லியில் உள்ள வல்லுனர்களே வடிவமைக்கின்றனர்.

என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டத்தை தழுவிய இந்த கேள்விகளுக்கு, தமிழக மாணவர்களால் எளிதில் பதில் அளிக்க முடிவதில்லை. என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டம் போல் சமச்சீர் கல்வி முறை வடிவமைக்கப்படவுள்ளதால், இனி வருங்காலங்களில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற முக்கிய தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெறும் அருமையான வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதுகுறித்து பாடத்திட்ட குழுவினர் சிலர் கூறுகையில், “தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை பிரகாசமானதாக மாற்றும் சமச்சீர் கல்வித் திட்டத்தை, பெற்றோர்களும் ஆசிரியர்களும் மனதார ஆதரிக்க வேண்டும். இத்திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்துவதில் ஆசிரியரின் பங்கு முக்கியம். ஆசிரியர்கள் நிறைய விஷயங்களை படித்து கற்றுக் கொள்வது முக்கியம்,” என்றார்.

Read more...

ஆசிரியர்களே வராத பள்ளிகள்: ஆத்தூரில் அதிகாரிகள் அதிர்ச்சி

Monday, October 12, 2009

நன்றி: தினமலர்

ஆத்தூர்: ஆத்தூரில் அரசு உறைவிடப் பள்ளிகளில் ஆய்வு நடத்திய வருவாய்த்துறையினர், ஆசிரியரே இல்லாத நிலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சத்துணவு சமையலறையில் மளிகைப் பொருட்களும் இல்லை. ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பெரிய கல்வராயன் மலையில் கீழ்நாடு கிராமம் உள்ளது. இங்குள்ள நாகலூர் அரசு உறைவிடப் பள்ளியில், தாசில்தார் ஜெயபால் உட்பட அதிகாரிகள், திடீர் சோதனை நடத்தினர். 55 மாணவர்களுக்கு பதிலாக, ஏழு மாணவர்கள் மட்டுமே இருந்தனர். தலைமை ஆசிரியர் பிரபுதாஸ், சமையலர் பெருமாள் உள்ளிட்டோர் யாரும் பணியில் இல்லை. மாணவர்களே தங்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தனர்.

குன்னூர் மலைக் கிராமத்திலுள்ள அரசு உறைவிட பள்ளியில் 100 மாணவர்களுக்கு, 75 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். தலைமை ஆசிரியர் செல்வராஜ், 15 நாட்களுக்கும் மேலாக பள்ளிக்கு வரவில்லை என்பதும் தெரியவந்தது. ஒரு ஆசிரியர், சமையலர் மட்டுமே இருந்துள்ளனர். சத்துணவு மையத்தில், தக்காளி, காய்கறி தவிர, மளிகைப் பொருட்கள் எதுவும் இல்லை.

இது தொடர்பாக வருவாய்த்துறையினர், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமையலர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர். தமிழ்நாடு பழங்குடியினர் நலவாரிய மாநில கமிட்டி உறுப்பினர் பழனிசாமி கூறியதாவது: மலைகிராம பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மாதத்தில் இரண்டு முறை மட்டுமே வருகின்றனர்.

எஸ்.எஸ்.எல்.சி., படித்துள்ள மலைவாழ் சமுதாயத்தினருக்கு மாதம் 1,000 ரூபாய் சம்பளம் கொடுத்துவிட்டு, பள்ளிக்கு ஆசிரியர்கள் வருவதில்லை. பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து விடுகின்றனர். ஆசிரியர்களது வருகை பதிவேட்டிலும் கையெழுத்து இல்லை. இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டு மாவட்ட நிர்வாகத்தை ஏமாற்றி, சம்பளம் பெற்று வரும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பழனிசாமி கூறினார்.


Read more...

அரசு பள்ளி தத்தெடுப்பு திட்டத்தில் தொய்வு


நன்றி: தினமலர்

உள்ளூர் பகுதிகளைச் சேர்ந்த செல்வந்தர்கள், தொழிலதிபர்கள், தங்கள் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து தேவையான கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்கும் திட்டம், தற்போது தொய்வடைந்துள்ளது.

இதற்கு, அதிகாரிகளின் போதிய ஒத்துழைப்பின்மை மற்றும் ஐந்து லட்ச ரூபாய் கொடுத்தால், பள்ளிக்கு தாங்கள் விரும்பும் பெயர்களை சூட்டலாம் என்றிருந்த அரசாணை ரத்து போன்றவை, முக்கிய காரணங்களாக உள்ளன. தமிழகத்தில் இயங்கும் பள்ளிகளில், பெரும்பான்மையாக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் தான் உள்ளன. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு, முழுமையான உள் கட்டமைப்பு வசதிகளை அரசே செய்து கொடுப்பது என்பது சிரமம் தான்.

இதை அறிந்து தான், அரசுப் பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை உள்ளூர் வி.ஐ.பி.,க்கள் செய்து தரவும், அதற்காக பள்ளியில் நன்கொடையாளர்கள் விரும்பும் பெயரை வைத்துக் கொள்ளவும் அரசு அனுமதித்தது. இதனால், பலர் அரசுப் பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்தினர். கடந்த சில ஆண்டுகளாக இந்த திட்டத்தில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு, மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகளின் ஒத்துழைப்பின்மை முக்கியக் காரணமாக இருக்கிறது.

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முன்வரும் நன்கொடையாளர்களை, உரிய முறையில் அணுகாமல் அலைய விடுவதாலும், திட்டத்தில் போதிய ஆர்வம் காட்டாததாலும் இந்த திட்டம் தற்போது முடங்கிப் போயுள்ளது. அரசுப் பள்ளிகளுக்கு, ஐந்து லட்ச ரூபாய் நன்கொடை அளித்தால், அந்தப் பள்ளிக்கு நன்கொடையாளர் விரும்பும் பெயரை சூட்டலாம் என்று அரசாணை இருந்தது. இந்த அரசாணை ரத்து செய்யப்பட்டு விட்டதாக, பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்கொடை திட்டம் குறைந்துபோனதற்கு, இது ஒரு முக்கியக் காரணம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போதைய திட்டத்தின்படி, பள்ளிக்குத் தேவையான வகுப்பறைகள் அல்லது ஆய்வகங்கள் போன்ற வசதிகளை, நன்கொடையாளர்கள் செய்து தரலாம் என்றும், அந்த குறிப்பிட்ட அறைக்கு மட்டும் நன்கொடையாளர்கள் விரும்பிய பெயரை சூட்டலாம் என்றும் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளில், அரசுப் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில், நன்கொடையாளர்களின் பங்கு சொல்லும்படியாக இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அடுத்த கல்வியாண்டில் சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வரும் நிலையில், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. சமச்சீர் கல்வி திட்டம் குறித்து ஆய்வு செய்த முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன், "சமச்சீர் கல்வி என்பது வெறும் பாடத் திட்டம் மட்டும் கிடையாது;

அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில், சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றிலும், இந்தக் கருத்தை முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் உள்ளிட்ட கல்வியாளர்கள் வலியுறுத்தினர். பள்ளிகளில் எந்தவித வசதிகளும் இல்லாமல், பாடத் திட்டத்தை மட்டும் பொதுவாக வழங்கி விட்டால், அதனால் எந்தவித மாற்றங்களும் ஏற்படாது.

அரசுப் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் செல்வந்தர்களையும், தொழிலதிபர்களையும் பங்கேற்குமாறு அரசு வேண்டுகோள் விடுக்க வேண்டும். நன்கொடையாளர்கள் விரும்பும் பெயர்களை பள்ளிக்கு சூட்டவும், கூடுதல் கட்டடங்களுக்கு பெயர் சூட்டிக் கொள்ளவும் வழிவகை செய்ய வேண்டும். நன்கொடையாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு நினைத்தால், இந்த திட்டத்தை பெரிய அளவில் மக்களிடம் எடுத்துச் சென்று, அதன் மூலம் அரசுப் பள்ளிகளின் வசதிகளை கண்டிப்பாக மேம்படுத்த முடியும் என்ற கருத்து எழுந்திருக்கிறது.

Read more...

தமிழ்நாட்டில் 12 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ஈரோட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

Saturday, October 10, 2009

நன்றி: தினத்தந்தி (ஈரோடு, அக். 10-)

தமிழ்நாட்டில் 12 ஆயிரம் ஆசிரியர்கள் அரசு தேர்வாணையம் மூலம் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.


தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று காலை ஈரோடு வந்தார். ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடத்துக்கு சென்று பார்வையிட்டார். பள்ளிக்கூடத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் டாக்டர் அப்துல் கலாம் நூலகத்தை அமைச்சர் சுற்றிப்பார்த்தார். பின்னர் மாணவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

12 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்:

தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அரசு தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும். 12 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் ஆதி திராவிடர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க அரசு அனுமதித்துள்ளது. அதற்கான தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிவடைந்ததும் ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.

ஆசிரியர்கள் பற்றாக்குக்குறை:

இந்த 12 ஆயிரம் ஆசிரியர்களில் 1,000 ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்கள் ஆவார்கள். இவர்கள் நியமிக்கப்படும் வரை பிளஸ்-2 மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க மாநில பெற்றோர்-ஆசிரியர் கழகம் உதவியுடன் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில் 5 ஆசிரியர்கள் வீதம் அரசு நியமித்து வருகிறது. இதனால் அந்த பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை வர வாய்ப்பு இல்லை.

சமச்சீர் கல்வி:

தமிழகத்தில் சமச்சீர் கல்விக்கான வரைவு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணி ஒரு வார காலத்திற்குள் முடிவடையும். பின்னர் அது இணையதளத்தில் வெளியிடப்பட்டு பொது மக்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் ஆகியவர்களின் கருத்து கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் பாடப்புத்தகங்கள் தயாரிக்கும் பணி நடத்தப்படும்.

தற்போது 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு மட்டும் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படுகிறது. அடுத்த ஆண்டு மற்ற வகுப்புகளுக்கு பாடத்திட்டம் தயாரிக்கப்படும். தமிழக முதல்-அமைச்சர் கூறியபடிதான் சமச்சீர் கல்வி முறை அமலாக்கப்பட்டு வருகிறது.

மாணவர்களிடம் ஒழுக்கத்தை வளர்க்க வாழ்க்கை கல்வி முறையை சமச்சீர்கல்வியில் கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஆ.மு.காசிவிஸ்வநாதன், ஈரோடு மாவட்ட கலெக்டர் சுடலை கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் என்.கே.கே.பி.ராஜா, எஸ்.குருசாமி, மற்றும் மேயர் குமார் முருகேஸ், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பொன்.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நூலகம் திறப்பு:

முன்னதாக பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 3 வகுப்பறைகளை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். மேலும் அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அப்துல்கலாம் நூலகத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

Read more...

சிலேட்டை ஏந்தும் பிஞ்சுகள்.. பிளேட்டை ஏந்தி பிச்சை எடுக்குதே

Read more...

கல்வி உரிமை சட்டம் அமல்படுத்த ரூ.1.78 லட்சம் கோடி

Tuesday, October 6, 2009

அடுத்த ஐந்தாண்டுகளில், கல்வி பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு 1.78 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு செலவிட வேண்டியுள்ளது.

இந்த புதிய சட்டம், அடுத்த கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கல்வி பெறுவது என்பது அனைவரின் அடிப்படை உரிமை என்றாலும், அதை உத்தரவாக செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுகுறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:
கல்வி பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்த, மொத்தம் 1.78 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதில், 50 ஆயிரம் கோடி ரூபாய், சர்வ சிக்ச அபியான் திட்டத்தில் இருந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்க உள்ளன. இதனால், மொத்த தேவை 1.28 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

பன்னிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில், சர்வ சிக்ச அபியான் திட்டத்திற்கு, 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதி ஒதுக்கப்பட்டாலும், இன்னும் 68 ஆயிரம் கோடி ரூபாய் தேவை. எனவே, இது தொடர்பான அறிக்கையை நிதி அமைச்சகத்துக்கும், 13வது நிதி ஆணையத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் 60:40 என்ற வீதத்தில் நிதி ஒதுக்குகின்றன. இது 12வது திட்டத்தில், 50:50 என்ற வீதத்தில் மாறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நன்றி: தினமலர்

Read more...

ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள்

'என்.பி.டி.இ.எல்., திட்டத்தில், இரண்டாவது கட்டமாக, 2011ம் ஆண்டு டிசம்பருக்குள், 600 பொறியியல் மற்றும் அறிவியல் பாடங்கள், வெப் மற்றும் வீடியோ வடிவில் உருவாக்கப்பட்டு, ஆன்-லைனில் இலவசமாக வழங்கப்படும்' என, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் ஆனந்த் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க, மத்திய அரசு, என்.பி.டி.இ.எல்., திட்டத்தின் கீழ், பொறியியல் பாடங்களை ஆன்-லைனில் வழங்கி வருகிறது. ஏழு ஐ.ஐ.டி.,க்கள் மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எஸ்சி., ஆகியவை இணைந்து, பொறியியல் பாடங்களை வெப் மற்றும் வீடியோ வடிவில் உருவாக்கியுள்ளன. முதற்கட்டமாக, 21 கோடி ரூபாய் செலவில், சிவில், மெக்கானிக்கல், இ.சி.இ., எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், கோர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங், பயோடெக்னாலஜி ஆகிய பிரிவுகளில், 129 வெப் பாடங்கள், 110 வீடியோ பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவை, "www.youtube.com/iit', "http://nptel.iitm.ac.in' ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் இவற்றை இலவசமாக டவுண்லோடு செய்து கொள்ளலாம். இப்பாடங்களை, "டிவிடி' வடிவிலும் பெற்றுக் கொள்ளலாம். "டிடி' - ஏக்லவியா சேனலிலும் இப்பாடங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இணையதளத்தில், தினமும் 5,400 பேர் வீதம், இதுவரை 15 லட்சம் பேர் இப்பாடங்களைப் பார்த்துள்ளனர். என்.பி.டி.இ.எல்., திட்டத்தில், இரண்டாவது கட்டமாக, ஏரோஸ்பேஸ், கெமிக்கல் ஆகிய பொறியியல் மற்றும் வேதியியல், இயற்பியல், கணிதம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், குறைந்தபட்சம் 600 பாடங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதுநிலை மற்றும் சில பிஎச்.டி., பாடங்களும் உருவாக்கப்படுகின்றன. இதற்காக, மத்திய அரசு 96 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. 2011ம் ஆண்டு டிசம்பருக்குள் இப்பாடங்கள் உருவாக்கப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்படும். தேசிய ஐ.சி.டி., மிஷன் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 18 ஆயிரம் கல்லூரிகள் ஆன்-லைன் மூலம் இணைக்கப்பட உள்ளன. இப்பாடங்களைக் கற்பவர்களில் 40 சதவீதம் பேர் மாணவர்கள், எட்டு சதவீதம் பேர் ஆசிரியர்கள், 50 சதவீதம் பேர் ஏற்கனவே பட்டம் பெற்றவர்கள். அடுத்த மூன்று ஆண்டுகளில், தேசிய விர்ச்சுவல் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தை உருவாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அப்பல்கலைக் கழகத்தில் என்.பி.டி.இ.எல்., பாடங்கள் பயன்படுத்தி, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படும்.

நன்றி: தினமலர்

Read more...

தமிழாசிரியர் இல்லாத பள்ளிகள் தமிழில் தோற்கும் மாணவர்கள்

Sunday, October 4, 2009

தரம் உயர்த்திய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியர்களை நியமிக்காததால், பொது தேர்வில் தமிழில் தோல்வியடையும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாக அரசு தரம் உயர்த்தி வருகிறது. 1998 முதல் 2002 வரை தரம் உயர்வு செய்யப் பட்ட பள்ளிகளில் மொழிப்பாடம், அறிவியல் பாடப்பிரிவுகளில் ஐந்து முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.கடந்த 2002 முதல் தரம் உயர்த்தியுள்ள 740க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் ஆசியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி தமிழாசிரியர் இல்லாததால் உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கின்றனர்.

இதனால் ஆறு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் பாதிக்கிறது.தரம் உயர்வு செய்யப்படும் பள்ளிகளில் தமிழாசிரியர்களை நியமிக்க, அரசு கடந்த எட்டு ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு செய்யாததால், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து வருகிறது.தமிழாசிரியர்கள் இல்லாமல், தாமாக தமிழ் கற்கும் மாணவர்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெறுகின்றனர். தமிழக பள்ளிகளில் தமிழ் பாடத்தில் தோல்வியடையும் மாணவர்கள் விகிதத்தை குறைக்க, தரம் உயர்த்திய மேல்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியர்களை நியமிக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும்.

தரம் உயர்த்திய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியர்களை நியமிக்காததால், பொது தேர்வில் தமிழில் தோல்வியடையும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நன்றி: தினமலர்

Read more...

மாங்குடி அரசுப் பள்ளி மாறிய கதை!

ஜோதிமணிக்கு வயது பத்தொன்பது. அரசுப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். விரும்பி சேர்ந்த வேலை இது. அவருக்கு ஒரு கனவு இருந்தது. அடிப்படையில் இருந்து எல்லாமே மாறவேண்டும். மாணவர்களின் தலையெழுத்து மாற்றி எழுதப்பட வேண்டும். ஆசிரியப் பணியில் மட்டுமே இது சாத்தியம்.

மாணவர்கள் சோர்வின்றி கல்வி கற்கவேண்டும். இதற்கு வாகான வகுப்பறைகள் வேண்டும். ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு தொலைக்காட்சி பெட்டி, சுவர்க் கடிகாரம், காலண்டர், குடிதண்ணீர் குழாய், முகம் பார்க்கும் கண்ணாடி, நகம் வெட்டும் நெயில் கட்டர், குப்பைக்கூடை, மாணவர்கள் தங்களுக்குள் கடிதப் பரிமாற்றம் செய்துகொள்ள அஞ்சல்பெட்டி, கம்ப்யூட்டர், சுகாதாரமான கழிப்பறை, விளையாட்டுப் பொருட்கள், பூங்கா... இப்படியெல்லாம் நீண்டுக்கொண்டே போனது ஜோதிமணியின் கனவு. மனது வைத்தால் இவை சாத்தியப்படக் கூடிய மிக எளிய விஷயங்களே என்று நம்பினார்.

மேலும் தொடர்ந்து படிக்க:

யுவகிருஷ்ணா: மாங்குடி மாறிய கதை!

http://www.thehindu.com/2009/07/11/stories/2009071150510200.htm

Read more...

Science learning materials on Net soon

Friday, August 7, 2009

CHENNAI: By the end of this year, elementary school teachers and students can find an interactive, experiential science learning programme developed in association with IIT-Madras, freely available on the Internet. The Kuruvila Jacob Initiative for promoting excellence in school education, which was set up in memory of the headmaster of the Madras Christian College High School, has been running a programme to develop multimedia-enhanced science learning materials for Classes VI to IX, in partnership with IIT-Madras since February 2007.

More detailed news

Read more...

செக்ஸ் கல்வி தேவையில்லை | ராஜ்யசபா கமிட்டி பரிந்துரை

Sunday, June 14, 2009

புதுடில்லி : பள்ளிகளில் செக்ஸ் கல்வி தேவையில் லை. அதற்கு பதில், திருமணத்துக்கு முந் தைய உடலுறவால் வரும் சிக்கல்களை எடுத்துரைக்கலாம் என ராஜ்யசபா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. உயர்நிலைப்பள்ளிகளில் செக்ஸ் கல்வி போதிக்க வேண்டும் என, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்தது. ஆனால், இந்த படிப்பை மக்கள் ஏற்றுக் கொண்டாலொழிய, பாடத்திட்டமாக இதை அமல்படுத்தக் கூடாது என பல தரப்பிலிருந்து மனு செய்யப்பட்டது. எனவே, இது குறித்து ஆராய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. பள்ளிகளில் செக்ஸ் கல்வி அவசியமா? என்பது குறித்து, பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு தலைமையில் ராஜ்யசபா கமிட்டி ஆய்வு செய்தது.

இந்த கமிட்டி கூறியுள்ளதாவது: பசி, தாகம், காமம் போன்றவை ஒவ்வொரு வருக்கும் இயற்கையாக அமைந்துள்ளது. எனவே, செக்ஸ் குறித்து பாடம் கற்பிக்க வேண் டிய அவசியமில்லை. அதற்கு பதில், செக்ஸ் உணர்வைக் கட்டுப்படுத்தும் விதத்தை பள்ளிகளில் போதிக்கலாம். சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு, நம் நாட்டு துறவி களின் போதனைகள் போன்ற வற்றை பாடத் திட்டத்தில் சேர்க்கலாம். கலாசார பாரம்பரியம் மிக்க நமது சமுதாயத்துக்கு செக்ஸ் கல்வி ஒத்து வராது. இவ்வாறு இந்த கமிட்டி தனது அறிக் கையில் தெரிவித்துள்ளது. திருமணத் துக்கு முன் உடலுறவு கூடாது என்பதை, எப்படி பள்ளி சிறுமிகளுக்கு விளக்குவது என் பதை இந்த கமிட்டி குறிப்பிடவில்லை.

நன்றி: தினமலர் ஜூன் 14,2009

Read more...

விழிப்புணர்வு | பள்ளி வராத கிராமப்புற மாணவர்கள்

பொள்ளாச்சி: பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் இந்த ஆண்டும் மாணவர்களின் சேர்க்கை குறைவாகவே உள்ளது. சேர்க்கை விகிதம் குறித்த பட்டியலை அளிக்க தலைமையாசிரியர்கள் கால அவகாசம் கேட்டுள்ளனர்.அரசுப் பள்ளிகளில் நாளுக்கு நாள் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வரும் நிலையில், மாணவர்களின் கல்வித்திறனை அதிகரிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செயல்வழிக்கற்றல், படைப்பாற்றல் போன்ற புதிய பாடத்திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. "கலர் டிவி', "டிவிடி பிளேயர்' மற்றும் "லேப்டாப்' வசதிகள் அளிக்கப்பட்டு, "இங்கிலீஷ் அரவுண்டு அஸ்', "ஹலோ இங்கிலீஷ்' போன்ற பயிற்சிகள் மூலமாக ஆங்கில மொழித்திறனை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் உள்ள சலுகைகள், புதிய பாடத்திட்டம் குறித்து சேர்க்கைப் பேரணி, துண்டுப்பிரசுரம் வினியோகித்தல் உட்பட பல்வேறு வழிகளில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நேரிடையாக ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பெற்றோரிடம் விளக்கம் அளித்ததால், நடப்பாண்டில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரிக்கக்கூடும் என ஆர்வமுடன் எதிர்பார்க்கப்பட்டது.இருப்பினும், வழக்கம்போல் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை இந்த ஆண்டும் குறைவாகவே உள்ளது. இதுவரை எவ்வளவு மாணவர்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர் என்ற தகவலைக் கூற தலைமையாசிரியர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஒவ்வோர் ஆண்டும் புதிதாக எவ்வளவு மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர் என்று ஒன்றியந்தோறும் பட்டியல் தயாரித்து மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்படுகிறது. நடப்புக் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு 10 நாட்களான நிலையில், மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறித்து அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம் கேட்கப்பட்டுள்ளது.

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், யாரும் பள்ளியில் சேர முன்வரவில்லை. குறைந்த மாணவர்கள் மட்டுமே பள்ளியில் சேர்ந்துள்ளதால், பட்டியலை அளிக்க தலைமையாசிரியர்கள் தயக்கமடைகின்றனர். இன்னமும் ஒரு வாரம் கால அவகாசம் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இவ்வாறு, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி: தினமலர் ஜூன் 12,2009

Read more...

Educational CD for students 8th to 12th

Thursday, June 4, 2009

“Play Games to Learn”, an educational CD prepared by retired principal of Sri Ramakrishna Mission Vidyalaya College of Education T.R. Soundararaja Rao, aims at developing fundamental skills of students.

Power point presentation

According to a release, the CD is for students in classes VIII to XII.

It has three main programmes – the PGTL folder, FTP folder and Chakra Vyuh (a power point presentation of a puzzle).

Donation

The PGTL folder has six major sections – Tamil, English, Mathematics, graphics, games and picture puzzles.

Copies of the CD are available on demand and given away free of cost to those who donate Rs. 100 or more to the Santhoshi Educational Trust, according to a press release.

His Previous Releases can be found here.

Source: The Hindu

Read more...

அரசுப் பள்ளிகளின் தரம் உயர வேண்டிய அவசியம்!

Sunday, May 31, 2009

இந்த பதிவுகளை படித்ததில், அரசுப் பள்ளிக் கூடங்களின் முக்கியத்துவமும் அதே சமயத்தில் அவற்றின் இன்றைய நிலையும் உணரமுடிகிறது.

1. கல்வியின் விலை - 1 - மெட்ரிகுலேஷன் / தனியார் பள்ளிகளின் மறுபக்கம்

"வலைபதிவர் ஒரு பள்ளிக்கூடம் நடத்த வேண்டுமென்றால் அந்த நிர்வாகம் பல துறைகளிடமிருந்தும் அங்கீகாரம் அல்லது அனுமதி பெற வேண்டும் என்பதிலிருந்து நிறைய தகவல்களோடு பல கோணங்களிலும் கல்வியை அலசியிருக்கிறார்.
2. ஐஐடி மாணவர் நமக்கு சூப்பர் ஸ்டார், அவருக்கு ‘சேகுவாரா’ ஒரு பாப்ஸ்டார்
  • ஐஐடிக்களை பற்றிய ஒரு பார்வை.
  • ஐஐடி கல்வி தரத்தை புரிந்து நம்மை உயர்த்திக்கொள்வது
என்ற நோக்கத்தில் "வலைபதிவர் அக்னிக்குஞ்சு" தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். பலரும் இவரது கருத்துக்கு உடன்பட்டு பின்னூட்டமிட்டு இருக்கிறார்கள். இவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் ஐ.ஐ.டி-யில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

3. தேர்வு

எழுத்தாளர் ஜெயமோகன், தேர்வு என்ற தலைப்பில் தன் மகனுடன் சேர்ந்து அனுபவித்த பள்ளிக் கல்வி பிரச்சனைகளையும், கல்வி பற்றிய நம் சமூகத்தில் ஏற்பட்டுள்ள கண்ணோட்டங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

    1. Read more...

      Donate a Link for Green World - NGO

      You can donate a link from your blog or website for Green World - NGO, A Non-Profit Social Welfare Organization functioning at Erode.
      This is what you will see.



      Optionally use this Widget installer to add this link to your blogger blog.

        © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

      Back to TOP