Showing posts with label தன்னம்பிக்கை. Show all posts
Showing posts with label தன்னம்பிக்கை. Show all posts

இணையத்தின் மூலம் தொழில் முனைவோர் பயிற்சி

Thursday, March 4, 2010

இளைஞர்களை சுய வேலைவாய்ப்புக்கு ஊக்குவிக்க அவர்களுக்கு பல்வேறுபட்ட நிர்வாகத் திறமைகளை, இணையத்தின் உதவியோடு அளித்து, அதன் மூலம் பல இளைஞர்களை தொழில் தொடங்க வழிவகை செய்து, பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் பெருமளவிலான மக்களை அவர்களுக்கு ஏற்றவாறு சிறந்த முறையில் பயிற்சியளைத்து, சுயமாக நம்பிக்கையுடன் தொழில் தொடங்க உதவுகிறோம்.
சமீபத்தில் தொழில் நேசன் இதழில் இந்த விளம்பரத்தைப் பார்த்தேன். சொந்தமாக தொழில் தொடங்க இருப்பவர்களுக்காக பிரத்யூகமான பயிற்சியை இந்திய அரசின் சான்றிதழோடு தமிழில் கற்றுத்தருகிறார்கள். தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கு யாரை அணுகுவது, நடைமுறை தகவல்களை எவ்வாறு அறிந்து கொள்வது, எப்படி முறைப்படி பதிவு செய்து கொள்வது, எந்த வகையின் கீழ் நம் தொழிலை பதிவு செய்வது, அரசின் சலுகைகள் உதவிகள் என்னென்ன? போன்ற அனைத்து கேள்விகளுக்கும் இந்த பயிற்சியில் தெளிவு கிடக்கும் என்று நான் நினைக்கிறேன். மேலும் விபரங்களை தெரிந்து கொள்ள www.edponline.in இணையதளத்தைபாருங்கள்.

Read more...

ஐ.பி.எஸ்., அதிகாரியான ஏழை விவசாயி மகன்

Wednesday, October 14, 2009

நன்றி: தினமலர்

ரயிலில் குடும்பத்துடன் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யும் எளிமையான ஐ.பி.எஸ்., அதிகாரி டி.கே.ராஜேந்திரன்.

சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றது குறித்த தனது அனுபவங்களை அவர் பகிர்ந்துகொண்டதாவது: திருவண்ணாமலை அருகில் இருக்கும் ஓலைப்பாடி கிராமத்தில் பிறந்தேன். மொத்தமே நூறு குடும்பம்தான் இருக்கும். அப்பா விவசாயி. அம்மாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. தமிழ் மீடியம் ஸ்கூல்ல தான் படித்தேன்.

காலையிலேயே எழுந்து மாடுகளை மேய விடணும். அப்புறம், அப்பா பால் கறந்து கொடுப்பார். அதை வாடிக்கையாளர்கள் வீட்டில் ஊற்றிவிட்டு, ஸ்கூலுக்குப் போவேன். எங்க ஊரில், மழை பெய்ஞ்சு கிணறு நிறைஞ்சா தான் விவசாயம். இல்லாட்டி, கஷ்ட ஜீவனம் தான். ஸ்கூல்ல, ஹரிகிருஷ்ணன்னு ஒரு ஆசிரியர் இருந்தார். அவர் தான் ரொம்ப ஊக்கப்படுத்துவார். நல்ல புத்தகங்களைப் படித்து, அதிலுள்ள கருத்துக்களைச் சொல்வார். அவரால்தான், நன்றாகப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

பட்ட மேற்படிப்பிற்காக, சென்னை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். கோடம்பாக்கத்தில் இருந்த பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் தங்கிப் படிச்சேன். அப்பா கஷ்டப்பட்டு உழைத்து அனுப்புற பணத்தை, கொஞ்சம் கூட வீணாக்கக் கூடாதுன்னு, ரொம்ப சிக்கனமா இருப்பேன்.
கல்லூரிப் படிப்புடன், மத்திய அரசுப் பணிக்கான தேர்வையும் எழுதினேன். அதில் தேர்வாகி, குருப் டி அதிகாரியாக எனக்கு வேலை கிடைத்தது. ஆனால், அதில் சேர எனக்கு விருப்பமில்லை. ஐ.பி.எஸ்., அதிகாரியாக வேண்டும் என்பது தான் என் லட்சியம். இன்னும் அதிகமாக படித்தேன். ஒரு நாளுக்கு 14 மணி நேரம் படிப்பேன்.

ஐ.பி.எஸ்., தேர்வு எழுதி அதில் தேர்ச்சி அடைந்து டில்லிக்கு நேர்முகத் தேர்வுக்கு சென்றேன். டில்லியில் இன்டர்வியூ முடிந்து எங்க கிராமத்துக்கு வந்து விவசாயம் செய்ய ஆரம்பிச்சிட்டேன். ரிசல்ட் வந்ததே தெரியாது. ஒரு நாள், வயலில் நின்னுக்கிட்டு இருந்தபோது, எங்கப்பா ஒரு கடிதம் கொண்டு வந்தார். உடனே சைக்கிளை எடுத்துக்கொண்டு, வேட்டவலம் லைப்ரரிக்குச் சென்று, ஒரு வார ஆங்கில நாளிதழ்களைப் பார்த்து, நான் ஐ.பி.எஸ்., அதிகாரியா தேர்வானதை உறுதிப்படுத்திக்கிட்டேன். இதை முதல்ல யார்கிட்ட சொல்றதுன்னு தெரியல. எங்கப்பா, அம்மாகிட்ட சொன்னா அவங்களுக்கு புரியல. எனக்கு படிப்பு சொல்லிக் கொடுத்த ஹரிகிருஷ்ணன் சார் வீட்டுக்கு ஓடிப்போய் சொன்னேன். என் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாள் அது.

Read more...

மனதை நெறிப்படுத்தும் வழிகள்

Saturday, October 10, 2009

நன்றி: தினத்தந்தி

சமுதாயத்தின் விடிவெள்ளிகளான இளைஞர்களின் மேம்பாட்டுக்கு தேவையான விஷயங்களின் கடந்த வார தொடர்ச்சியை விளக்குகிறார் திருச்சி மண்டல வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குனர் ப.சுரேஷ்குமார்.

இளைஞர்களுக்கு சிந்தனை ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியம். சிந்தனைத் திறனை வளர்த்துக் கொள்ளுதல் அவசியம். மனதை நெறிப்படுத்தி திறன்களை பெறுவது எப்படி? அதற்கான வழிகள் இதோ...

* ஒரு பிரச்சினையை அறிமுகப்படுத்தி அதை எதிர்கொண்டு திறம்பட தீர்வு காண பழகிக் கொண்டால் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும்போதும் சுமூகமாக தீர்வு காண்பது சாத்தியமாகிவிடும்.

* தகவல்களைப் பெற்று அனுபவ ரீதியாக பல்வேறு கோணங்களில் ஆராயப் பழகிக் கொள்ள வேண்டும்.

* பல்வேறு காரணிகளை ஆராய்ந்து ஆரோக்கியமான பயனளிக்கும் முடிவை எடுக்க மனதை பழக்க வேண்டும்.

* நிர்ணயித்துக் கொண்ட இலக்கை குறுகிய காலத்தில் அடைய முடிவது, நீண்ட காலத்தில் அடைய முடிவது என்று வகைப்படுத்தி அதற்கேற்ப முயற்சி மேற்கொள்ள எண்ணத்தை நெறிப்படுத்த வேண்டும்.

சமூகத் திறன்களாவன:

* நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து நட்புறவுடன் நடந்து கொள்ளுதல், குடும்பத்திலுள்ள பெற்றோர்கள், சகோதர, சகோதரிகள், உறவினர்களுடன் சுமூகமாக நடந்து கொள்ளுதல், சமுதாயத்திலுள்ள அனைவரிடமும் இசைவுடன் பழகுதல், ஒவ்வொரு தனி மனிதனை அவரவர்களின் குறை, நிறைகளுடன் நட்பு பாராட்ட பழகுதல் போன்றவை உறவுகளை மேம்படுத்தும் திறன் களாகும்.

* கவனமாக கேட்கும் ஆற்றல், கேட்கும்போது உணர்வை வெளிப்படுத்துதல், உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தும் திறன், கருத்துக்களை கூறுதல் போன்றவை தொடர்பு கொள்ளும் திறன்களாகும்.

* இடர்பாடுகளை எதிர்கொள்ளுதல், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறன், தன்னுடைய நிலைப்பாட்டை வலியுறுத்தும் திறன் போன்ற சமாளிக்கும் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அகப்பண்புகள்:

இளைஞர்கள் அவரவர்களைப் பற்றி ஆரோக்கியமாக எண்ண வேண்டும் என்று க்ளென் மற்றும் ஆல்பர்ட் பன்டூரா என்ற உளவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். தங்களால் முடியும் என்று கருதும் இளைஞர்களே தலைவர் களாக முடியும். அவர்களது முக்கியத்துவத்தை அவர்களே அறிந்தவர்களாக இருப்பார்கள். சூழ்நிலைகளை மாற்றும் ஆற்றலும், தங்களது புலன்களை அடக்கி ஆளும் திறன் கொண்டவர்களாகவும் செயல்பட பயிற்சி அளிக்க வேண்டும்.

தூண்டுதல் உணர்வு:

இளைஞர்கள் மேம்பாட்டிற்கான பயிற்சி இளைஞர் களின் திறன் தேவை, அவர்களது வயது, கல்வி, அவர் களது ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.

நினைவாற்றல், புரிந்துகொள்ளும் திறன், பகுத்தறியும் திறன் இவை கற்பதற்கு தேவையான மூன்று முக்கியமான திறன்கள் ஆகும். வாழும் சமூகத்தையும் புரிந்துகொள்ளும் திறனும் முக்கியம்.

ஆக்கப்பூர்வமான சமூகப் பழக்கங்கள்:

இது நான்கு வகைப்படும். அவையாவன: சுய கட்டுப்பாடு, தன்னைத்தானே மதிப்பது, விடாமுயற்சியுடன் இலக்கை அடைய முயலுதல், விருப்பத்தை தள்ளிப் போடுதல், உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்துதல் முதல் வகையாகும்.

பொறுப்பு: வாக்குறுதியை நிறைவேற்றும் பண்பு, நேர்மையாக நடந்து கொள்ளுதல், சவால்களை சந்தர்ப்பமாக மாற்றுதல், எடுத்த காரியத்தை குறித்த காலத்தில் முடிக்கும் பண்பு, தாங்கள் செய்த தவறுக்கு முன்வந்து பொறுப்பேற்றுக் கொள்ளுதல் போன்றவை இரண்டாவது வகையாகும்.

மதிப்பீடு செய்யும் திறன்: ஆராய்ந்து அறிந்து எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் செயல்களை தவிர்த்து, சரியாக மதிப்பீடு செய்து முடிவு எடுத்து செயல்படும் திறன் மூன்றாவது வகையாகும்.

மற்றவர்களுடன் இணைந்து செயல்படுதல்: உதவும் குணம், பகிர்ந்து கொள்ளும் ஆற்றல், கேட்டு மதிப்பீடு செய்து கருத்தை தெரிவித்தல், குழு மனப்பான்மையில் செயல்படுதல் போன்றவை நான்காவது வகையாகும்.

பிணைப்பு: இளைஞர்களது மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வல்லது அவரவருடைய குடும்ப சூழ்நிலையாகும். அதன் அடிப்படையிலேயே பள்ளி மற்றும் சமுதாயத்தில் வெளிப்படுத்தும் செயல்பாடுகளும் பெரும்பாலும் அமையும். உறவுகள் ஆரோக்கியமானதாக அமையும்போது இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். பெற்றோர்களுக்கு கூட்டம் நடத்தி குழந்தைகள் மேம்பாட்டிற்கு ஆலோசனை வழங்கலாம்.

தொடர்ந்து பள்ளிச் சூழலை மேம்படுத்துதல் நண்பர் களுடன் நல்ல புரிதலுடன் நடந்து கொள்ளுதல் போன்ற பழக்கத்தை ஏற்படுத்தலாம். சமூக செயல்பாடுகளுடன் ஒருங்கிணைத்து சமூக மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும் விதத்தில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கலாம்.

ஒவ்வொரு இளைஞரும் உடல் ஆரோக்கியம் பேணுதல், அறிவாற்றலை வளர்த்தல், சமூக மேம்பாட்டில் அக்கறை செலுத்துதல், நெறிப்படுத்தப்பட்ட உணர்வுகளுடன் செயல்படுதல் போன்ற பண்புகளை கொண்டு விளங்கினால்தான் இளைஞர் மேம்பாட்டிற்கு மேற்கொள்ளும் முயற்சி, பயிற்சி போன்றவை முழுமையான பலனை அளிக்கும்.

Read more...

வெற்றிக்கு வழி அமைதி

நன்றி: தினத்தந்தி

மகிழ்ச்சியும், நிம்மதியுமே வாழ்க்கையின் லட்சியம். நாம் செய்யும் எல்லா செயல்களும் இதை நோக்கியே அமைந்திருக்கின்றன. இந்த இரு பண்புகளுக்கும் அமைதியுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஏனெனில் நீங்கள் அமைதியை இழந்தால் இவை இரண்டுமே உங்களைவிட்டு தூரத்துக்கு சென்று விடும்.

உங்கள் அனுபவத்தில் இது நிகழ்ந்திருக்கலாம். பிறர் உங்களை காரணமின்றி திட்டுவதாகவும், குறை கூறுவதாகவும் உங்களுக்கு தோன்றி இருக்கலாம். அது உண்மையாகவோ அல்லது மாறாகவோ இருக்கலாம். எப்படி இருந்தாலும் சிக்கலான காலக்கட்டத்தில் அமைதியுடன் இருந்து பொறுமையாக சமாளியுங்கள். அப்போது அமைதியின் சக்தியை நீங்கள் உணருவீர்கள். பிறகு அதன் பலனை அனுபவிப்பீர்கள்.

ஆனால் எல்லா நேரத்திலும் அப்படி இருக்க முடியுமா? பேச வேண்டிய தருணத்தில் பேசாமல் இருப்பதுதான் மிகப்பெரிய பலவீனம். தமிழில் ஒரு பழமொழி உண்டு. `கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றி செத்ததாம் கொக்கு' என்பது அந்தப் பழமொழி. இதில் வரும் கொக்குபோல காத்திருப்பது அமைதிக்கு எடுத்துக்காட்டு அல்ல. அறிவீனத்தின் வெளிப்பாடு.

அமைதியை இழப்பதே கோபம். துன்பத்தின் ஆரம்பம். பலவீனமானவர்களுக்கே சீக்கிரம் கோபம் வரும் என்பது உண்மைதான். உங்கள் கருத்தை சாந்தமாகவே வெளியிடுங்கள். அப்படியும் மற்றவர், உங்களின் மீது கோபத்தை கொட்டுவதையே குறியாக இருக்கிறார் என்பதை உணர்ந்தால் அங்கே நீங்கள் கண்டிப்பாக அமைதியாகத்தான் இருக்க வேண்டும்.

எங்கே சரியான புரிதல் இருக்கிறதோ, அங்கே கோபம் குறைந்துவிடும். அமைதி சூழ்ந்து கொள்ளும். அமைதி கலையும் இடத்தை நன்றாக கவனித்துப் பாருங்கள். அங்கே எதிரெதிர் கருத்துக்கள் தோன்றியதாலேயே ஆட்சேபணை உருவாகி கோபம் கொப்பளிக்கும். அமைதி கெடும்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் கருத்து சரியாகவே இருந்தாலும் அதை வலியுறுத்த வேறு தருணத்தை எதிர்பார்த்து நீங்கள் அமைதி காப்பதே அறிவுடைமை. "அறிவற்றம் காக்கும் கருவி" என்பார் தமிழ்ப்புலவன் வள்ளுவர்.

உங்களுக்கு கோபமூட்டும் தருணங்களில் நீங்கள் சரியான புரிதலோடு அமைதி அடைவீர்களானால், அந்த அறிவுடைமையானது உங்களது நெருங்கிய சுற்றத்தாரான மகிழ்ச்சியையும், நிம்மதியையும் நிலைத்திருக்க வைக்கும் என்று இங்கு பொருள் கொள்ளலாம்.

எனவே எல்லோர் முன்னிலையிலும் பணிவுடன் இருங்கள். எந்த நிலைமையிலும் அடக்கமாக இருங்கள். அனைவரிடமும் அன்பு செலுத்தவும், அன்பைப் பெறவும் கற்றுக் கொள்ளுங்கள். பிறர் உங்களை குறை கூறும்போது மவுனமாக இருங்கள். அவர்கள் மீது எந்த விதமான பகைமை உணர்ச்சியும் கொள்ளாதீர்கள். வெளிப்படையாக கோபத்தை காட்டுவதைவிட இது மிகவும் மோசமானது. இது ஒரு மானசீகப் புற்றுநோய் எனலாம்.

மறப்போம், மன்னிப்போம். இது வெறும் லட்சியவாத மொழி அல்ல. கோழைச் செயலுமல்ல. உங்கள் அமைதியைப் பாதுகாக்கும் ஒரு வழிதான். அந்த வீண் பழிச்சொற்கள் பொய்யானவை என்பதை நீங்களே அறிவீர்கள். பிறகு ஏன் அதையே மனதில் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டும்? குழப்பிக் கொண்டால் உங்களுக்குத் தூக்கம் கெடும். படபடப்பு அதிகரிக்கும். நிம்மதி பறிபோகும். மகிழ்ச்சி மறைந்துவிடும். அமைதி காக்க கற்றுக் கொண்டால் அடக்கத்திலும், தூய்மையிலும் நீங்கள் வளர்ச்சி அடைவீர்கள்.

வாழ்வில் உங்களை தடுமாற வைக்கும் இத்தகைய சம்பவங்கள் எப்போது வேண்டுமானாலும் குறுக்கிடலாம். அப்போது உங்களுக்கு விருப்பமான செயலில் மனதை லயிக்கச் செய்யுங்கள். உங்களுக்குப் பிடித்தமான வேலை அல்லது பொழுதுபோக்கில் நீங்கள் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்களானால் உங்களுக்கு மிகுந்த மன அமைதியும், திருப்தியும் கிடைக்கும்.

எந்த செல்வத்தை காட்டிலும் மன அமைதியே பெரிது. அதை நீங்கள் உணர்ந்தால் அமைதியை கெடுக்கும் கோபத்தை கைவிடுங்கள். இக்கட்டான நிலையில் சரியான புரிதலுடன் அமைதி காத்திடுங்கள். சாதகமான நேரத்தில் உங்களின் கருத்தை வெளியிடுங்கள். அமைதியின் சக்தியை உணருங்கள். உறுதி பலமடங்கு கூடும். எளிதில் வெற்றி காண்பீர்கள்.

Read more...

Donate a Link for Green World - NGO

You can donate a link from your blog or website for Green World - NGO, A Non-Profit Social Welfare Organization functioning at Erode.
This is what you will see.



Optionally use this Widget installer to add this link to your blogger blog.

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP