அரவாணிகளுக்கு உதவ தமிழக அரசு திட்டம்: மனசு

Monday, March 30, 2009

அரவாணிகளின் முன்னேற்றத்திற்கு தமிழக அரசு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கல்விஆகியவற்றை வழங்கியுள்ளது. பொதுமக்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் அரவாணிகளைப் பற்றியதகவல்களை அறிந்து, அவர்களுக்கு உதவ "மனசு' என்ற பெயரில் புதிய தொலைபேசி (044-25990505) சேவையைதமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

இந்த தொலைபேசி மூலம் அரவாணிகள் தொடர்பான தகவல்களை அனைவரும் கேட்டுப் பெறலாம். அவர்களுக்குசேவை செய்ய விரும்புவோரும் இதில் தொடர்பு கொள்ளலாம். அரவாணிகள் குறித்த பிரச்னைகளைக் கையாள்வதுகுறித்து பொதுமக்கள் ஆலோசனைகளைப் பெறலாம். அவர்கள் தொடர்பான தவறான தகவல்களைக் களையஇச்சேவை உதவும். அரவாணிகளுக்கு வாடகைக்கு வீடு தர விரும்புவோர், அவர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ள முன்வருவோர் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களை போக்கிக் கொள்ளலாம். வாடகைவீடு, வேலை தொடர்பான விவரங்களையும் பதிவு செய்து வைக்கலாம். அரவாணிகளுடன் நன்கு பழகி, அவர்களைத்தெளிவாகப் புரிந்து கொண்டவர்கள் இந்த சேவை மையங்களில் ஆலோசகர்களாக அமர்த்தப்பட்டுள்ளனர். தமிழிலும், ஆங்கிலத்திலும் ஆலோசனை கூறும் வகையில், இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இலவச மருத்துவசேவை, நேரடி ஆலோசனை, அரவாணிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பான வக்கீல்கள் உதவி, வேலைவாய்ப்புக்கேற்ற மென்திறன் பயிற்சி ஆகியவையும் இதில் அடங்கும்.

நன்றி: தினமலர்

Read more...

Sunday, March 8, 2009

மூச்சு முட்டும்
இரவில் - உன்
முந்தானை வாசம்
இருமல் முறிக்கும்
மருந்தாகும்.

-செந்தில் பாரி

நீ மழைச் சேறு
தாண்டுகையில் - உன்
கெண்டைக்கால் அழகை
கவ்வி ருசிக்கும்
என் கண்களிலே
பல் முளைக்கும்.

- அண்ணாமலை

நன்றி: ஆனந்த விகடன்

Read more...

Donate a Link for Green World - NGO

You can donate a link from your blog or website for Green World - NGO, A Non-Profit Social Welfare Organization functioning at Erode.
This is what you will see.



Optionally use this Widget installer to add this link to your blogger blog.

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP