அப்படியா?

Sunday, January 31, 2010

ஜென் குருவான ஹகுயின் எல்லோராலும் தூய்மையானவர் என்று புகழப்பட்டு
பெரிதும் மதிக்கப்படுபவர். ஜப்பானிய அழகி ஒருத்தி அவர் வாழும் இடத்திற்கு அருகில் உணவு விடுதி வைத்திருந்த தம்பதிகளுக்கு ஒரே புதல்வி. திடீரென்று ஒரு நாள் அவள் கர்ப்பமுற்றிருப்பதைக் கண்ட பெற்றோர் திகைத்தனர். கோபம் மேலிட இதற்குக் காரணமானவன் யார் என்று பெற்றோர் அவளைக் கேட்டனர். பதில் வரவில்லை. உடனே மிகவும் அவளை வற்புறுத்தவே அவள் ஹகுயின் பெயரைக் கூறினாள். கோபமடைந்த பெற்றோர் ஹகுயினை அணுகிக் கத்தினர். 


"அப்படியா?" என்றார் ஹகுயின்.

குழந்தை பிறந்தவுடன் அதை ஹகுயினிடம் கொண்டு வந்து விட்டனர் பெண்ணின்
பெற்றோர். அவரது நல்ல பெயருக்குக் களங்கம் ஏற்பட்டது. அதைப் பற்றி அவர் அலட்டிக் கொள்ளவே இல்லை. குழந்தையைச் சீராட்டி நன்கு வளர்க்க ஆரம்பித்தார். அண்டை அயலாரிடம் பால் வாங்கி குழந்தைக்குக் கொடுத்து வரலானார்.


ஒரு வருடம் கழிந்தது. குழந்தையின் தாயான அந்தப் பெண்ணால் பொறுத்துக்
கொள்ள முடியவில்லை. மீன் சந்தையின் மீன் விற்பனை செய்யும் இளைஞன் ஒருவனே குழந்தையின் தகப்பன் என்று அவள் உண்மையைப் பெற்றோரிடம் கூறினாள். உடனே பெண்ணின் பெற்றோர் குழந்தையைத் திரும்பப் பெற வேண்டி ஹகுயினிடம் விரைந்தனர். குழந்தையைத் திருப்பித் தர ஹகுயின் இசைந்தார்.


தங்கள் செயலுக்கு மன்னிப்பு அளிக்குமாறு அவரைப் பெண்ணின் பெற்றோர் மன்றாடிக் கேட்டுக் கொண்டு குழந்தையின் தந்தை யார் என்பதையும் கூறினர்.

ஹகுயின் கூறினார்: "அப்படியா?"

நன்றி: மஞ்சரி அக்டோபர் 2006
நன்றி: http://www.nilacharal.com/tamil/specials/zen_stories_288.asp

Read more...

மனித நேயம்!

Sunday, January 24, 2010





  

 
 



 
 
 
 
 

Read more...

ஈரோட்டில் ஓர் புரட்சி அமைப்பு - பசுமை உலகம்

Monday, January 11, 2010

ஈரோடு நகரின் மையப் பகுதிகளில் நீங்கள் பயணம் செய்திருக்கிறீர்களா? அப்படியானால் நடந்து செல்லும் போதோ அல்லது பஸ்ஸில் பயணம் செய்யும் போதோ அல்லது வண்டியை சிக்னலில் நிறுத்தி விட்டு சற்று ஆசுவாசப் படுத்திக் கொள்ளும் போதோ, பக்கத்தில் சுவர்களில் எழுதியுள்ள இந்த வாசகங்களை பார்க்காமல் நீங்கள் கடந்து சென்றிருக்க முடியாது!
கை ரேகையை நம்பாதே, கைகளை நம்பு.
காடு நகரமானால், நாடு நரகமாகும்.
மனைவியை மட்டும் நேசி, எயிட்ஸ் வருமா யோசி.

இது மாதிரி இன்னும் நிறைய விழிப்புணர்வு வாசகங்களும், பொன் மொழிகளும் அரசுச் சுவர்களை அழகுபடுத்துகின்றன. இவற்றின் பின்னணியில் 'பசுமை உலகம்' என்ற சமூகசேவை அமைப்பும் சில தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் இருக்கிறது.

அரசு மருத்துவமனை, அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி, நீதிமன்ற வளாகச் சுவர் ஆகிய இடங்களில் பசுமை உலகத்தால் அழகுபடுத்தப்பட்ட இத்தகைய வாசகங்களை காணமுடியும். மேலும் ஈரோடு பேருந்து நிலையத்திற்குள் சமீபத்தில் சமீபத்தில் அமைக்கப்பட்ட அழகுப்பூங்கா, மினி பஸ் ஸ்டேண்ட் பூங்கா ஆகியவை இவ்வமைப்பின் முயற்சியாலும் தனியார் நிறுவனங்களின் உதவியாலும் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் ஈரோட்டில் சாதாரணமாகவே நம் கண்ணில் படுகின்ற விசயங்கள். இவை தவிர இன்னும் நிறைய விஷயங்கள் பசுமை உலகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

யார் இந்த பசுமை உலகம்?

பசுமை உலகம் அமைப்பானது உலகம் வெப்பமாதலை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கையின் பொருட்டு, மரக்கன்றுகளை ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் அதிகமாக நடும் முயற்சியாக ஒரு தன்னார்வ சேவைக் குழுவாக 2001-ல் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அடுத்த ஆண்டிலேயே 2002-ல் 'பசுமை உலகம்' என்ற தன்னார்வ சமூகசேவை நிறுவன அமைப்பாக முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

காலப் போக்கில் சமூகத்தின் தேவையுணர்ந்து, மரக்கன்றுகளை நட்டு ஈரோட்டை பசுமையாக்குவதோடு மட்டுமல்லாது, மேலும் பல சமூகப் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு எல்லா வகையிலும் சமூகத்தை பசுமையாக்கிட முயன்று கொண்டிருக்கிறது இவ்வமைப்பு!

பசுமை உலகத்தின் சேவைகள்:

1. மரக்கன்று உற்பத்தி மற்றும் நடுதல்

தமிழக அரசின் "பசுமை தமிழகம் 2010" திட்டத்துடன் இணைந்து பசுமை உலகமானது, மரக்கன்றுகள் வளர்க்கும் பண்ணை அமைத்து, மரக்கன்று உற்பத்தி மற்றும் மரம் நடுதல் சேவையை செய்து வருகிறது. 2010-ல் 50ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மேலும் மரக்கன்றுகள் தேவைப்படுவோர் பசுமை உலகத்தை தொடர்பு கொள்ளலாம். மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

2. குழந்தை பாதுகாப்பு மற்றும் கல்வி

பசுமை உலகம் மூலம் ஆண்டுக்கு குறந்தபட்சம் 200 முதல் 250 ஏழைக் குழந்தைகள் கல்வி உதவி பெற்று வருகிறார்கள். இக்குழந்தைகளுக்குத் தேவையான நோட்டுப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

மேலும் ஈரோட்டைச் சுற்றிலும் உள்ள குடிசைவாழ் பகுதிகளில், அரசுப் பள்ளிக்கூட மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்குச் செல்லுவதை ஊக்குவிக்கும் பொருட்டு அந்தந்தப் பகுதிகளிலேயே தன்னார்வத் தொண்டர்கள் மூலம் மாலை நேர பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இவர்களுக்கு மாதம்தோறும் சிறு ஊக்கத் தொகையாக ரூ.300/- இவ்வமைப்பின் மூலம் வழங்கப்படுகிறது. இங்கு ஏட்டுக் கல்வி தவிர வாழ்க்கை கல்வியாக சமூகத்துடன் இணக்கமான இதர விஷயங்களும் கற்றுத்தரப்படுகின்றன. ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தது 25 முதல் 30 மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.

3. பெண்கள் முன்னேற்றம்

சமுதாயத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக, குறிப்பாக ஆதரவற்ற பெண்கள், உடல் ஊனமுற்ற பெண்கள், விதவைப் பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்கள் ஆகியோரின் முன்னேற்றத்திற்காக, சமூகத்தில் அவர்களுக்கு சிறப்பான மரியாதைப் பெற்றுத் தரும் வகையில் தன்னம்பிக்கையையும் சுய தொழில் வேலைவாய்ப்பு பயிற்சியையும் பசுமை உலகம் வழங்கி வருகிறது.

தையல் பயிற்சி, கம்ப்யூட்ட்ர் பயிற்சி, அழகுக் கலை பயிற்சி ஆகிய பயிற்சிகளுக்கு ஒவ்வொரு சுற்றுக்கும் 20 பெண்கள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு மதிய உணவுடன் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலான பயிற்சி, ஒவ்வொன்றும் 70 நாட்களில் நிறைவடையும். இப்பயிற்சி முற்றிலும் இலவசமாகவும், பகுதி உதவித் தொகையுடனும் இரு பிரிவுகளில் வழங்கப்படுகிறது.

தையல் பயிற்சி:

சுயதொழில் வாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்புடன் கூடிய தையல் பயிற்சியானது, பிரத்யோக பயிற்சிக் கூடத்தில் பெண்களுக்காக வழங்கப்படுகிறது. பயிற்சி பற்றிய விபரங்கள் பயிற்சி ஆரம்பிக்கும் ஒரு வாரம் முன்னதாக நாளிதழ் மற்றும் பசுமை உலக இணையதளத்தில் வெளியிடப்படும் அல்லது பசுமை உலகம் அலுவலகத்தை தொடர்பு கொண்டும் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

2002-லிருந்து 2009 நவம்பர் வரை 300 பெண்கள் இலவச தையல் இயந்திரத்துடன் பயிற்சியும் பெற்றுள்ளார்கள்.

கம்ப்யூட்ட்ர் பயிற்சி:

பசுமை உலகத்தின் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் நேரு யுவ கேந்திரா, நகராட்சி மற்றும் நபார்டு நலத்திட்ட உதவியுடன் பெண்களுக்காக அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சியும், D.T.P, Tally போன்ற படிப்புகளும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் அளிக்கப்படுகிறது. இதுவரை தற்காலிகமாக இதில் 125 பேர் பயனடைந்துள்ளனர்.

அழகுக் கலை பயிற்சி:

நபார்டு உதவியுடன் பெண்கள் தாங்களே சுயமாக அழகுக் கலை நிலையம் வைத்துக் கொள்ளும் வகையில் சிறப்பான அழகுக்கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. அழகுநிலையம் சொந்தமாக வைக்க இவர்களே வங்கிக் கடனுக்கும் பரிந்துரை செய்கிறார்கள்.

தன்னம்பிக்கை மற்றும் யோகா பயிற்சி:

பெண்களுக்கு சமூகத்தில் உண்டாகும் தடைகளை எதிர்த்துப் போராடவும், வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொள்ளவும் யோகா மற்றும் தன்னம்பிக்கை  வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
ஒரு தாய் கர்ப்ப காலத்தில் எப்படி இருக்கிறார்ளோ, எதை உணருகிறார்ளோ, எந்த மனநிலையை அதிகம் கொண்டிருக்கிறார்ளோ அதைப் பொறுத்து குழந்தையும் அதன் வளரும் விதமும் இருக்கும். குழந்தையின் இயல்புக்கும் தாயின் மனம் மற்றும் உடல்நிலைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு என்பது அறிவியல் உண்மை மற்றும் நம் அனுபவ உண்மையும் கூட. இத்தகைய கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவத்திற்கு வழிகோலும் வகையிலும், நாளைய தலைமுறைக்கு நல்ல குழைந்தைப் பேறு உண்டாகிடவும் யோகா பயிற்சிகளும் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சி தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

4.இளைஞர்களுக்கு
  • நேரு யுவ கேந்திரா திட்டத்தின் உதவியுடன் இளைஞர் மன்றங்களுக்குத் தேவையான விளையாட்டுக் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 
  • இளைஞர்களின் உடல் நலம் மற்றும் மனநலம் பேணும் விதமாக கிராம விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டும் ஊக்குவிக்கப்பட்டும் வரப்படுகிறது.
  • நாட்டுநலப் பணித்திட்ட முகாம்கள், தன்னம்பிக்கை முகாம்கள், உலகப்பொருளாதார விளக்க முகாம்கள், தொழில் முனைவோர் ஆலோசனை முகாம்கள் ஆகியவைகளில் பசுமை உலகம் உற்சாகமாக பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
  • இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் வேலைவாய்ப்புக்காக அணுகுவோரையும், வேலை வாய்ப்பு கொடுப்போரையும் பசுமை உலகம் ஒருங்கிணைக்கும் சேவையும் செய்து வருகிறது.

6. மற்ற செயல்பாடுகள் மற்றும் சமீபகால திட்டங்கள்:
  • பிறந்தநாள், திருமணநாள் போன்ற விசேஷங்களை ஆதரவற்றோர், கருணை இல்லங்களோடு ஆத்ம திருப்தியுடன் கொண்டாட ஒருங்கினைப்பு செய்தல்.
  • கண்தானம், இரத்ததானம் செய்ய விருப்பமுடையவர்கள் பசுமை உலகத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். இவை பசுமை உலகத்தால் சிறந்த முறையில் ஒருங்கிணைக்கப் படுகின்றன.
  • உலக எயிட்ஸ் தினம், ரேபிஸ் (வெறிநாய்க் கடி) தினம் போன்ற எல்லா உலக விழிப்புணர்வு தினங்கள் பசுமை உலகத்தால் அனுசரிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
  • மோளக்கவுண்டம் பாளையம் அரசுப்பள்ளியில் மிகச் சமீபத்தில் கழிப்பிட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
  • ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சின்னச் சின்ன மலைக்குன்றுகள், கரடு ஆகிய இடங்களில் வளமான நீர் ஆதாரத்தை உருவாக்கி, அவற்றின் மேலும், அதனைச் சுற்றிலும் மரக்கன்றுகளை உள்ளூர் நன்கொடையாளர்களின் பெயரில் நட்டு வளர்ப்பதற்கான பணிகள் நடந்துவருகின்றன. நன்கொடை ஆர்வலர்கள் தொடர்பு கொள்ளலாம்.
  • கிராம இந்தியா திட்டத்திற்காக, ஐந்து கிராமங்களை தத்தெடுக்க இருக்கிறது பசுமை உலகம். இதற்கான ஆய்வுப்பணிகள் நடந்து வருகின்றன.
  • தெருக்களில் கேட்பாரற்று சுற்றித் திரியும் வெறிநாய்களின் பிரச்சினைக்காக பசுமை உலகம் சார்பில் ஒரு பொதுநல வழக்கு தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. எயிட்ஸ் போலவே வெறிநாய்க் கடி நோயும் குணப்படுத்த முடியாத நோய் என்பது இன்னும் நம்மில் பலருக்கு தெரிந்திராத விஷயும். இது தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்த, பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஒரு குறும்படமும் தயாரிக்கப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.

பசுமை உலகம் பற்றிய செயல்பாடுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வசதியாக இன்டர்னெட் ஊடக வசதிகளும் (blog, twitter), செல்போன் இலவச SMS வசதிகளும் பசுமை உலகத்தால் வழங்கப்படுகின்றன. உங்களின் வசதிக்கேற்ப ஒன்றையோ எல்லாவற்றையுமோ பயன்படுத்திக்கொள்ளலாம். கீழே இந்த வசதிகள் அனைத்துக்குமான இணைய இணைப்புகள் (Links) வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

7. திட்டங்கள் தயார், உதவி தேவை:

சில நல்ல திட்டங்கள் போதிய நிதி ஆதாரமின்மையால் இன்னும் முழுமையான செயல்பாட்டிற்கு வராமல் தேங்கி நிற்கின்றன. அவற்றில் சில
  • பேருந்து நிலையம் மற்றும் நகரில் ஆங்காங்கு இருக்கும் ஆதரவற்ற பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுத்தல்
  • எயிட்ஸ் நோயாளிகளின் மறுவாழ்விற்குத் தேவையான உதவிகளை செய்தல்
இதுபோன்ற இன்னும் ஆரோக்கியமான நல்ல திட்டங்களும் ஆக்கபூர்வமான எண்ணங்களும் என்றும் பசுமையாக 'பசுமை உலகமிடம்' இருக்கிறது.

எல்லா சமூக சேவை அமைப்பிற்கும் இதயத் துடிப்பாக இருபது சேவை மனப்பான்மை கொண்ட தொழிலதிபர்கள், நல்ல இதயம் படைத்த சமூக ஆர்வலர்கள், மக்கள் ஆகியோர்தான். கொடுக்கும் நிதி முழுமையாக, சரியான இலக்குக்காக, சரியான விதத்தில் சென்று சேர வேண்டும் என நினைக்கும் நன்கொடையாளர்கள் நம்பிக்கையோடு பசுமை உலகத்தை அணுகலாம்!

இன்டர்நெட்டில் பசுமை உலகம்:

பசுமை உலகம் இணையதளம் இப்போது புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப் பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பசுமை உலகம் அதன் செயல்பாடுகளை உடனுக்குடன் பதிவு செய்து வருகிறது. இவற்றில் உங்களை பதிவு செய்து கொண்டு மேலும் பசுமை உலகத்தின் சேவையை நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பசுமை உலகம் பற்றிய செயல்பாடுகளை உடனுக்குடன் செல்போனிலேயே தெரிந்து கொள்ளமுடியும். அதற்கு இங்கு சென்று பதிவு செய்யலாம் அல்லது  <9870807070> என்ற எண்ணிற்கு <ON GREENWORLD-NGO> என்று செய்தி அனுப்பவும். உங்கள் நெட்வொர்க்கைப் பொறுத்து  ஒருமுறை மட்டும் National SMS-க்கான செலவாகும்.

டிவிட்டரில் பசுமை உலகம்: http://twitter.com/greenworldindia
ஆர்குட்டில் பசுமை உலகம்: http://www.orkut.co.in/Main#Community?cmm=97382765
SMS -ல் பசுமை உலகம்: http://labs.google.co.in/smschannels/channel/greenworld-NGO
பசுமை உலகம் இணையதளம்: http://greenworldindia.org

நீங்கள் உங்களின் இமெயில் கையொப்பம், வலைப்பூ, இணையதளம், சமூக வலைதள புரபைல்(Profile) ஆகியவற்றில் 'பசுமை உலகம்' இணையதளத்தின் முகவரிக்கு இணைப்பு கொடுத்து உதவலாம். இணைப்பு கொடுக்க இங்கு வாருங்கள்.

உங்களின் ஓய்வு நேரத்தை சமூக சேவைக்கு செலவிட விரும்பினால் பசுமை உலகத்தில் தன்னார்வ சேவகராக இணைந்து கொண்டு, வாய்ப்பு கிடைக்கும் போது உடலுழைப்பையோ, கருத்துக்களையோ அல்லது எந்த வகையில் உங்களது பங்களிப்பை தரமுடியுமோ அவ்வாறு தந்து உதவலாம். இணையதளத்திலேயே உங்களை பதிவு செய்து கொள்ள இங்கே சுட்டுங்கள்.

அதேபோல் உதவி தேவைப்படுவோர்களும் தங்களைப் பற்றிய விபரங்களை இங்கே பதிவு செய்ய முடியும்.

மேலும் தொடர்புக்கு பசுமை உலகம் அமைப்பின் தலைவர் மணமோகன் (98421 39831), செயலாளர் பூங்குன்றன் (98426 74110) இவர்களை அணுகலாம்.

Read more...

Donate a Link for Green World - NGO

You can donate a link from your blog or website for Green World - NGO, A Non-Profit Social Welfare Organization functioning at Erode.
This is what you will see.



Optionally use this Widget installer to add this link to your blogger blog.

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP