தமிழாசிரியர் இல்லாத பள்ளிகள் தமிழில் தோற்கும் மாணவர்கள்

Sunday, October 4, 2009

தரம் உயர்த்திய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியர்களை நியமிக்காததால், பொது தேர்வில் தமிழில் தோல்வியடையும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாக அரசு தரம் உயர்த்தி வருகிறது. 1998 முதல் 2002 வரை தரம் உயர்வு செய்யப் பட்ட பள்ளிகளில் மொழிப்பாடம், அறிவியல் பாடப்பிரிவுகளில் ஐந்து முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.கடந்த 2002 முதல் தரம் உயர்த்தியுள்ள 740க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் ஆசியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி தமிழாசிரியர் இல்லாததால் உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கின்றனர்.

இதனால் ஆறு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் பாதிக்கிறது.தரம் உயர்வு செய்யப்படும் பள்ளிகளில் தமிழாசிரியர்களை நியமிக்க, அரசு கடந்த எட்டு ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு செய்யாததால், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து வருகிறது.தமிழாசிரியர்கள் இல்லாமல், தாமாக தமிழ் கற்கும் மாணவர்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெறுகின்றனர். தமிழக பள்ளிகளில் தமிழ் பாடத்தில் தோல்வியடையும் மாணவர்கள் விகிதத்தை குறைக்க, தரம் உயர்த்திய மேல்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியர்களை நியமிக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும்.

தரம் உயர்த்திய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியர்களை நியமிக்காததால், பொது தேர்வில் தமிழில் தோல்வியடையும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நன்றி: தினமலர்

0 comments:

Donate a Link for Green World - NGO

You can donate a link from your blog or website for Green World - NGO, A Non-Profit Social Welfare Organization functioning at Erode.
This is what you will see.



Optionally use this Widget installer to add this link to your blogger blog.

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP