அரசுப் பள்ளிகளின் தரம் உயர வேண்டிய அவசியம்!

Sunday, May 31, 2009

இந்த பதிவுகளை படித்ததில், அரசுப் பள்ளிக் கூடங்களின் முக்கியத்துவமும் அதே சமயத்தில் அவற்றின் இன்றைய நிலையும் உணரமுடிகிறது.

1. கல்வியின் விலை - 1 - மெட்ரிகுலேஷன் / தனியார் பள்ளிகளின் மறுபக்கம்

"வலைபதிவர் ஒரு பள்ளிக்கூடம் நடத்த வேண்டுமென்றால் அந்த நிர்வாகம் பல துறைகளிடமிருந்தும் அங்கீகாரம் அல்லது அனுமதி பெற வேண்டும் என்பதிலிருந்து நிறைய தகவல்களோடு பல கோணங்களிலும் கல்வியை அலசியிருக்கிறார்.
2. ஐஐடி மாணவர் நமக்கு சூப்பர் ஸ்டார், அவருக்கு ‘சேகுவாரா’ ஒரு பாப்ஸ்டார்
  • ஐஐடிக்களை பற்றிய ஒரு பார்வை.
  • ஐஐடி கல்வி தரத்தை புரிந்து நம்மை உயர்த்திக்கொள்வது
என்ற நோக்கத்தில் "வலைபதிவர் அக்னிக்குஞ்சு" தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். பலரும் இவரது கருத்துக்கு உடன்பட்டு பின்னூட்டமிட்டு இருக்கிறார்கள். இவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் ஐ.ஐ.டி-யில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

3. தேர்வு

எழுத்தாளர் ஜெயமோகன், தேர்வு என்ற தலைப்பில் தன் மகனுடன் சேர்ந்து அனுபவித்த பள்ளிக் கல்வி பிரச்சனைகளையும், கல்வி பற்றிய நம் சமூகத்தில் ஏற்பட்டுள்ள கண்ணோட்டங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

    1. Read more...

      பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

      Friday, May 29, 2009



      நன்றி: கவிதைச் சாலை

      Read more...

      Dhirubhai Ambani Quotes

      Read more...

      மற்றவர்கள் கருத்தை மாற்ற முடியுமா?

      நன்றி: என்.கணேசன்

      ஒரு புகழ்பெற்ற அரசியல் தலைவர் தன் நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த முல்லா "என்ன கழுதையுடன் வாக்கிங் போகிறீர்கள்?" என்று கிண்டலாகக் கேட்க தலைவருக்குக் கோபம் வந்து விட்டது.

      "என்ன உனக்குக் கண் சரியாகத் தெரியவில்லையா? இது என் நாய்" என்றார்.

      முல்லா தலைவரிடம் சொன்னார். "அது நாய் என்று எனக்குத் தெரியும். நான் கேள்வி கேட்டது அந்த நாயிடம்" என்றார்.

      தலைவருக்கு தன்னைக் கழுதை என்று முல்லா பரிகாசம் செய்கிறார் என்று தெரிய சிறிது நேரம் தேவைப்பட்டது. எல்லோரும் தன்னை தலைவா என்று மரியாதையுடன் அழைக்கையில் முல்லா கழுதை என்கிறாரே என்று உடனே வெகுண்டு நீதிமன்றத்தில் முல்லா மீது வழக்கு தொடர்ந்தார்.

      வழக்கை விசாரித்த நீதிபதி முல்லா ஒரு புகழ் பெற்ற தலைவரை கழுதை என்றழைத்தது தவறு என்றும் அந்தத் தலைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.

      முல்லா நீதிபதியிடம் ஒரு சந்தேகம் கேட்டார். "ஐயா நான் கழுதையைத் தலைவா என்றழைப்பதில் சட்டத்தில் ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா?"

      "இல்லை" என்றார் நீதிபதி.

      சரி என்ற முல்லா அந்தத் தலைவரிடம் சென்று "தலைவா என்னை மன்னித்து விடுங்கள்"என்றார்.

      Read more...

      தமிழகத்தில் கல்வி | எழுத்தாளர் ஜெயமோகன்

      Thursday, May 28, 2009

      எழுத்தாளர் ஜெயமோகன், தேர்வு என்ற தலைப்பில் தன் மகனுடன் சேர்ந்து அனுபவித்த பள்ளிக் கல்வி பிரச்சனைகளையும், கல்வி பற்றிய நம் சமூகத்தில் ஏற்பட்டுள்ள கண்ணோட்டங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார். நான் வாசித்து விட்டு முடிக்கும் போது அரசுப் பள்ளிக்கூடங்கள் அணுகு முறையில் நன்றாக உள்ளதாகவே உணர்கிறேன். ஆனால் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என்பது வருந்தத் தக்க ஒன்று. இதைப் பற்றி அவர் பகிர்ந்து கொள்ளவில்லை. ஒருவேளை அவர் மகன் படிக்கும் அரசுப் பள்ளிக் கூடத்தில் எல்லா வசதிகளும் இருக்கலாம்.

      Read more...

      The girl who silenced the world for 6 minutes

      Wednesday, May 27, 2009


      Severin Suzuki Speaks at Rio in 1992

      "Hello, I’m Severin Suzuki, speaking for ECO, the Environmental Children’s Organization. We are a group of four twelve and thirteen year-olds from Canada trying to make a difference…


      We raised all the money ourselves to come 6,000 miles to tell you adults
you must change your ways.


      Coming here today I have no hidden agenda. I’m fighting for my future. Losing my future is not like losing an election or a few points in the stock market.


      I am here to speak for all future generations yet to come. I am here to
speak on behalf of the starving children around the world whose cries go unheard. I am here to speak for the countless animals dying across this planet because they have nowhere left to go.


      I am afraid to go out in the sun now because of the holes in the ozone.

      I
 am afraid to breathe the air because I don’t know what chemicals are in 
it.

      I used to go fishing in Vancouver, my hometown, with my dad, until just 
a few years ago we found the fish full of cancers. And now we hear about animals and plants going extinct every day—
vanishing forever.

      In my life, I have dreamt of seeing the great herds of wild animals, jungles, and rain forests full of birds and butterflies, but now I wonder if they will even exist for my children to see.


      Did you worry about these things when you were my age?

      All this is happening before our eyes, and yet we act as if we have all the time we want and all the solutions. I’m only a child and I don’t have all the solutions, but I want you to 
realise, neither do you!




      You don’t know how to fix the holes in our ozone layer.

      You don’t know how to bring the salmon back up a dead stream. You don’t know how to bring back an animal now extinct.

      And you can’t bring back the forests that once grew where there is now a
 desert.



      If you don’t know how to fix it, please stop breaking it!

      Here you may be delegates of your governments, business people, organizers, reporters, or politicians. But really you are mothers and fathers, sisters and brothers, aunts and uncles.

      And all of you are somebody’s child.

      I’m only a child, yet I know we are all a part of a family, five billion
strong—in fact, 30 million species strong. And borders and governments will never change that. I’m only a child, yet I know we are all in this together and should act as one single world toward one single goal.


      In my anger, I am not blind, and in my fear, I am not afraid to tell the world how I feel.


      In my country, we make so much waste. We buy and throw away, buy and throw away. And yet northern countries will not share with the needy.
      Even when we have more than enough, we are afraid to lose some of our wealth, afraid to let go.


      In Canada, we live the privileged life with plenty of food, water, and shelter. We have watches, bicycles, computers, and television sets. Two days ago here in Brazil, we were shocked when we spent time with some children living on the streets. And this is what one child told us:
 “I wish I was rich. And if I were, I would give all the street children food, clothes, medicine, shelter, love, and affection.”


      If this child on the street who has nothing is willing to share, why are we
 who have everything still so greedy? 
I can’t stop thinking that these children are my own age, that it makes a
tremendous difference where you are born.

      I could be one of those
children living in the favelas of Rio.



      I could be a child starving in Somalia, a victim of war in the Middle East, or a beggar in India. I’m only a child, yet I know if all the money spent on war was spent on
ending poverty and finding environmental answers, what a wonderful place this Earth would be.


      At school, even in kindergarten, you teach us how to behave in the world. You teach us not to fight with others, to work things out, to respect others, to clean up our mess, not to hurt other creatures, to
share, not be greedy. Then why do you go out and do the things you tell us not to do?


      Do not forget why you are attending these conferences, who you are doing this for—we are your children. You are deciding what kind of a world we will grow up in. Parents should be able to comfort their children by saying, "Everything’s going to be all right.” “We’re doing the best we can.”
“It’s not the end of the world.”


      But I don’t think you can say that to us anymore. Are we even on your
list of priorities? My dad always says, “You are what you do, not what you say.”
Well, what you do makes me cry at night. You grown-ups say you love us.

      I challenge you, please, make your actions reflect your words.
Thank you for listening."

      Thanks to ourcoolschool.com for text version of the speech.

      Read more...

      உள்ளும் புறமும்

      Tuesday, May 26, 2009

      காவியும் காக்கியும் வெளுத்துப் போச்சு
      திருட்டு பெரட்டு கொழுத்துப் போச்சு
      மானம் போச்சு மரியாத போச்சு
      இதக் கேட்டு கேட்டு அலுத்துப் போச்சு!
      என்ற டீக்கட பேச்சு என்ன ஆச்சு?
      கடக்காரி வளஞ்சு குனிஞ்சு பெருக்கும் போது
      வாச குப்பயோட சாக்கடைக்குப் போச்சு!

      -சிவாஜி

      Read more...

      ஒரு வெட்கம் வருதே

      Monday, May 25, 2009

      Read more...

      ராகா.காம் இப்ப சூப்பரோ சுப்பர்!

      Sunday, May 10, 2009

      ராகா.காம் இனையதளம் இசை ரசிகர்களின் பொக்கிசம். இப்பொது இதை மிகவும் நன்றாக வடிவமைத்து இருக்கிறார்கள். PLAYER முதற்கொண்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதிகள், டிவிட்டர், சமூக தளங்களுடன் இணைப்பு என நிறைய வசதிகளுடனும் புதுப் பொலிவுடனும் இருக்கிறது.

      இதற்கு முன்னால் நாம் பாடல்களை வெவ்வேறு படங்களில் இருந்து PLAYLIST-ல் சேர்த்து, அவற்றை வரிசையாக கேட்க முடியாது என்று நினைக்கிறேன். ஆனால் இப்பொது QUICK LIST வசதி மூலம் இது சாத்தியம்.




      இதன் மூலம் நீங்கள் உங்கள் விருப்பமான பாடல்களை ஒவ்வொன்றாக லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம். இதை நீங்கள் வலது கீழ் மூலையில் பார்க்கலாம். அங்கேயே ப்ளே வசதியும் தரப் பட்டிருக்கிறது.ஆனால் நீங்கள் பாடல் பாடிக்கொண்டிருக்கும் போது அதில் மேலும் இடைச் செருக முடியாது. கடைசியாக இணைத்த பாடலுடன் அத்தனையையும் சேர்த்து புதிதாகத்தான் ப்ளே செய்ய வேண்டும்.

      மேலும் PLAYLIST-ல் நம் விருப்ப பாடல்களுக்கு தாவிக்கொள்ளலாம், SUFFLE, REPEAT வசதியும் இருக்கிறது. கிட்டத்தட்ட நம் வின்டோஸ் பிளேயர், வின் ஆம்ப் போல...



      நான் பட்ட கஷ்டங்கள்:

      நான் ஹரிஹரன் பாடின கொள்முகல் மலரே பாடலை தேட முனைந்தேன். என்ன படம் என்று தெரியவில்லை. பாட்டு என்ன என்றும், பாடினவர் யார் என்றும் மட்டும் தான் தெரியும். சரி என்று Tamil > Singer > Hariharan என்ற வரிசையில் நுழைந்தேன். ஆனால் அங்கே பாடல்கள் அகரவரிசைப்படி இல்லை. அப்படி வரிசைப் படுத்த வழியும் இல்லை. இதற்குமுன் இந்த வசதி இருந்ததாக ஞாபகம்! இருந்தாலும் பாடலின் மீதான ஈர்ப்பினால் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. முடிவில் 13 பக்கங்களில் ஒவ்வொரு பக்கமாக தேட முற்படுகையில் 3 வது பக்கத்திலேயே அகப்பட்டு விட்டது.

      மற்றபடி ராகா.காம் பற்றி உங்களுக்கே தெரியும். நன்றி!

      Read more...

      இனிய இரவு | ஏ.ஆர்.ரஹ்மானின் மெல்லிசைத் தூறல்

      Friday, May 8, 2009



      வழக்கமாக கம்ப்யூட்டர் முன் உட்காரும் போது பாட்டுகளை ஓட விட்டுத் தான், மற்ற விசயங்களுக்கே போவேன். இங்கு நான் இரவு நேரங்களில் மிகவும் விரும்பிக் கேட்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்ந்தெடுத்த பாடல்களின் தொகுப்பை பகிர்ந்துள்ளேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இரவு தூங்கப் போகும் முன் AUTO SHUT DOWN கொடுத்துவிட்டு, இந்த மெல்லிசை தூறலோடு கரைந்து தூங்கிப் போவது என் வழக்கம்.

      இங்கு 35 பாடல்கள் உள்ளன. இந்த Player-ல் வலதுபுறம் மேல் மூலையில் உள்ள SUFFLE Option இதில் சிறப்பு அம்சம்!
      1. முத்து- விடுகதையா இந்த வாழ்க்கை
      2. இந்தியன் - பச்சைக் கிளிகள் தோளோடு
      3. கிழக்கு சீமையிலே - தென்கிழக்கு சீமையிலே செங்காத்து மூலையிலே
      4. மே மாதம் - என் மேல் விழுந்த பனித்துளியே

      இந்த பாடல்களின் இணைப்புகள் இணையத்தில் எனக்கு அகப்பட வில்லை. அவை இந்த தொகுப்பில் விட்டுப் போனதில் சிறு வருத்தமே.

      மற்றபடி TamilBeat.com ம், Playlist.com ம் இந்த தொகுப்பு உருவாக்கதில் மிகவும் உதவின. அத்தளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி! நீங்களும் கூட உங்களுக்கு பிடித்தமான பாடல்களை வரிசைப் படுத்தி இங்கு தொகுத்து வைத்துக் கொள்ளாலாம்.

      பாடல்களை கேட்டு தூறலில் நனைந்து செல்லுங்கள்!

      மேற்கூறிய விடுபட்ட பாடல்களை ஒரு சிறு தேடுதலில் பிடித்து இணைத்துவிட்டேன். Tamilwire.com, thenisai.com ஆகிய தளங்களுக்கு என் நன்றிகள்!
      PlayList Updated on May 11,2009

      Read more...

      OSHO: Science and the Inner Journey

      Thursday, May 7, 2009

      Read more...

      இங்கே என்ன தான் செய்து கொண்டிருக்கிறீர்!

      மலை உச்சியில் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

      மலையின் கீழிருந்து மூன்று பேர் அவனைப் பார்த்தனர்.

      மூவரில் ஒருவன் சொன்னான், “மலை மேல் நிற்பவன் யாருக்கோ காத்துக் கொண்டிருக்கிறான்”.

      மற்ற இருவர் அவன் பேச்சை மறுத்தனர்.

      மூவரில் இரண்டாமவன் சொன்னான், “யாருக்கோ காத்திருப்பவன், அந்த யாரோ வருகிறாரா என்று திரும்பிப் பார்த்த வண்ணம் நிற்க வேண்டும். ஆனால், மலை மேல் நிற்பவன் அப்படிச் செய்யவில்லை. எனவே, அவன் யாருக்கோ காத்திருக்கவில்லை. அவன் எதையோ தேட அங்கே வந்து நிற்கிறான்” என்றான்.

      இரண்டாமவன் பேச்சும் ஏற்கப்படவில்லை.

      மூவரில் மூன்றாமவன் சொன்னான், ” எதையோ தேடுபவன், ஆணி அடித்தாமாதிரி நின்று கொண்டிருக்க மாட்டான், அங்கே, இங்கே திரும்பிப் பார்த்தபடி தேடும் பாவனையில் இருப்பான். இவன் தியானம் செய்து கொண்டிருக்கிறான்”. என்றான்.

      இந்த பதிலும் திருப்தி தரவில்லை. எனவே, அவர்கள் மலை மேல் ஏறிச் சென்று நின்றுகொண்டிருப்பவனிடமே கேட்டுவிடலாம் என முடிவு செய்து மலை மேல் ஏறி நிற்பவன் அருகில் சென்றனர்.

      மலை மேல் நிற்பவனிடம், “நீங்கள் யாருக்கோ காத்திருக்கிறீர்களா ? என்று கேட்டனர்.

      அவன் இல்லை என்றான்.

      “நீங்கள் எதையோ தொலைத்துவிட்டு, அதைத் தேடுகிறீர்களா? என்று கேட்டனர்.

      அவன் அதற்கும் இல்லை என்றான்.

      கடைசியாக, “நீங்கள் இங்கே தனிமையில் நின்றபடி தியானம் செய்கிறீர்களா?” என்று கேட்டனர்.

      அதற்குக்கூட, மலை மேல் நின்று கொண்டிருந்தவனிடம் இல்லை என்று தான் பதில் வந்தது.

      பின் இங்கே என்ன தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று மூவரும் கேட்டனர்.

      அதற்கு அவன், ” நான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன்” என்றான்.

      Read more...

      மாணவச் செல்வங்களை புத்திசாலிகளாக மாற்ற அரசு (புதுத்) திட்டம்!

      Wednesday, May 6, 2009

      கஷ்டமான பாடத்தை பாடத்திட்டத்திலிருந்து நீக்கியும், தேர்ச்சி விழுக்காட்டு மதிப்பெண்ணை குறைத்தும் மாணவர்களை அதிக மதிப்பெண் வாங்க வைக்கலாம். இதனால் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று புத்திசாலிகள் ஆகிவிடுவார்கள்!!!

      நன்றி: The Hindu

      Read more...

      ஜென் குரு, குழந்தை புத்தர்

      கிழக்கு பதிப்பகத்தின் நூல்களில் ஒன்றான (தோல்விகளைத் துரத்தி அடி - எழில் கிருஷ்ணன் - விலை ரூ 75.) என்ற நூலிலிருந்து...


      அவர் ஒரு ஜென் குரு. ஜப்பானில் அவரைக் குழந்தை புத்தர் என்று சொல்வார்கள். அவருடைய பேச்சு, நடவடிக்கை எல்லாம் குழந்தைத்தனமாக இருக்கும். பக்குவம் அடைந்த ஞானிபோல பேசமாட்டார். நடந்துகொள்ள மாட்டார். யாராவது யோசனை கேட்டால் 'சீ போ' என்றுதான் சொல்வார். 'வர்றியா கிட்டிப்புள் ஆடலாம்' என்று ஏதாவதொரு விளையாட்டுக்கு அழைப்பார். என்ன வேண்டுமானாலும் வாங்கித்தருகிறேன் என்றால் திண்பண்டம் கேட்பார். அவருடைய விருப்பம் எல்லாமே குழந்தைத்தனமாக இருக்கும்.


      பிறகு ஏன் அவரை ஞானி என்று சொன்னார்கள்?


      அவர் வாழ்ந்த காலத்தில் அவர் கொண்டாடப்படவில்லை. அவர் மரித்தபிறகே அவருடைய வாழ்க்கையைக் கேள்விப்பட்டு அவரைக் கொண்டாட ஆரம்பித்தார்கள். அவர் வாழ்ந்த வாழ்க்கையைக் கொண்டே அவருடைய மகத்துவம் அறியப்பட்டது. இந்தக் கதையைப் பாருங்கள்.


      மன்னர் ஒருநாள் அவரைப் பார்க்க வந்தார். குரு வெளியே அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருந்தார். மன்னர் குழம்பிப் போய்விட்டார். 'நான் தவறான நேரத்தில் வந்தேனாஎன்று குருவிடம் கேட்டார்.


      'ஆமாம் நான் மிகவும் வேலையாக இருக்கிறேன்என்றார் குரு.


      இவ்வளவு பெரிய ஞானி, யாரைப் பார்க்க வெளியே போகிறார் என்று மன்னர் தீவிரமாக யோசிக்கத் தொடங்கினார். குரு சந்திக்கப் போகும் நபர் நிச்சயம் பெரிய ஆளாக இருக்கக்கூடும் என்று அவர் நம்பினார். மன்னர் குருவைப் பின்தொடர ஆரம்பித்தார். அவர் உதவியாளர்கள் பின்தொடர்ந்தனர்.


      குரு தலைதெறிக்க ஓடுகிறார். அவருக்குக் காயங்கள் ஏற்படுகின்றன. அவர் அளவுக்கு மன்னராலும் அவர் உதவியாளர்களாலும் வேகமாகச் செல்லமுடியவில்லை. திணறுகிறார்கள். குரு சுவரெல்லாம் தாண்டிச் செல்கிறார்.


      இறுதியில் ஆற்றங்கரைப் பக்கத்தில் உள்ள நாணல் புதருக்குச் செல்கிறார். ராஜாவுக்குப் புரியவில்லை. அங்கே ஏழுட்டுக் குட்டிப் பயல்கள் கும்பலாக நின்றுகொண்டிருந்தனர். குருவைப் பார்த்ததும் கையசைத்தனர். பதிலுக்கு இவரும் சந்தோஷமாகக் சையசைத்தார்.


      ராஜா குழம்பிப் போய் நின்றார்.


      குட்டிப்பயல்களிடம், 'ஸாரிப்பா லேட்டாகிவிட்டதுஎன்கிறார் குரு.


      ஒரு குட்டிபையன் குருவைக் கோபித்துக்கொள்கிறான்.


      குரு அவனிடம், 'அதான் சொல்லிட்டேன் இல்லை. வேணும்னா தோப்புக்கரணம் போடறேன்என்று உடனே பத்துத் தோப்புக்கரணம் போடுகிறார்.


      இப்போது ராஜாவுக்குக் கோபம் வந்தது. உலகமே நான் என்ன சொன்னாலும் அதற்குத் தலைவணங்கும். ஆனால் என்னை அவமதித்துவிட்டு இங்கே வந்து கொட்டம் அடிக்கிறாரே என்று குருமீது அடக்கமுடியாத கோபம் கொண்டார். .

      குரு தொடர்ந்து அந்தச் சிறுவர்களைத் தாஜா செய்கிறார். பயல்களிடம், ’பச்சைக் குதிரை விளையாடலாமாஎன்று கேட்கிறார்.


      அனைவரும் சாபூத்ரி போடுகிறார்கள் திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடுகிறார்கள். குரு வைக்கோல் போருக்குள் ஒளிந்து கொள்கிறார்.


      ராஜாவால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை.


      சிறுவர்கள் ஆறு பேரும் குருவைத் தேடோ தேடென்று தேடுகிறார்கள். மறைவில் நின்றுகொண்டு ராஜா அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.


      மாலையாகிறது. இருட்டாகிவிடுகிறது. ராஜாவுக்குப் பசியெடுக்கிறது. கடுங்கோபத்துடன் அங்கே இருந்து கிளம்புகிறார். ராஜாவின் கட்டளையின்படி அவருடைய ஆள்கள் தொடர்ந்து குருவைக் கண்காணிக்கிறார்கள். குருவினுடைய விநோத நடவடிக்கைகள் பற்றி அடுத்த நாள் ராஜாவுக்கு ரிப்போர்ட் கொடுத்தாகவேண்டும்.


      அடுத்தநாள் ராஜாவுக்குத் தகவல் வருகிறது. இரவு போய் காலையானபின்பும் குரு வைக்கோல் போரிலிருந்து வெளியே வரவில்லை.


      ராஜா திடுக்கிட்டுப் போகிறார். மீண்டும் அந்த இடத்துக்கு ஓடுகிறார்.


      குருவுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை அவர்களது பெற்றோர்கள் கூட்டிச் சென்றுவிட்டார்கள். ஆனால் குரு இன்னமும் வைக்கோல் போருக்குள்தான் இருக்கிறார் என்று ராஜாவுக்குத் தகவல் சொல்லப்படுகிறது..

      'பிரியுங்கள்என்று ஆணையிடுகிறார் ராஜா. வைக்கோல் போரைப் பிரிக்கிறார்கள்.


      உள்ளே குறுகிக்கொண்டு ஒளிந்துகொண்டிருக்கிறார் குரு. ராஜாவின் ஆள்கள் பிரிப்பதைப் பார்த்து 'ஐய்யோ, பிரிக்காதீங்க. பிரிக்காதீங்க. அந்தப் பசங்க என்னைக் கண்டுபிடிச்சுடுவாங்கஎன்கிறார்.


      நன்றி: ச.ந.கண்ணன்

      Read more...

      அரசு பள்ளிகளை தத்தெடுக்க பலத்த ஆதரவு : குவிகிறது விண்ணப்பம்

      அரசுப் பள்ளிகளின் நிலை உண்மையில் மிகவும் வருந்தத்தக்க நிலையில்தான் இருக்கிறது. இதை நான் 12வது முடித்து விட்டு பிறகென்ன செய்வது என்று விழித்து விட்டு, பிறகு மீண்டும் படித்ததையே ஒருவருடம் டியூசன் உதவியோடு SELF IMPROVEMENT(இப்பொது இல்லை)போட்டு, ஒரு நல்ல அரசுப் பொறியியற்கல்லூரியில் சேர்ந்தபோது தான்... நாம் எவ்வளவு ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை உணரமுடிந்தது. நான் எங்கள் கிராமத்தில் உள்ள அரசு நடுனிலைப் பள்ளியிலும் மற்றும் அருகாமையில் உள்ள அரசு மேல்னிலைப்பள்ளியியிலும் படித்தேன்.

      இப்பவும் என்னைப் போன்றவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்க ஏதாவது வழிவகை உருவாகாதா என்ற ஏக்கமும் அதைப் பற்றிய தேடலும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அப்படி தேடியதில் கிடைத்த ஒரு ஆறுதல் செய்தியை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

      சுட்டி: http://www.dinamalar.in/pothunewsdetail.asp?News_id=11323&cls=&ncat=TN

      செய்தி:

      கோவை : தமிழக அரசு திட்டத்தின்படி, பள்ளிகளைத் தத்தெடுக்க தொழிலதிபர்கள் பலர் முன் வந்துள்ளனர். தமிழக கிராமங்களில் உள்ள பல அரசுப் பள்ளிகள் குடிநீர், கழிப்பறை, வகுப்பறை வசதிகள் இல்லாமல் உள்ளன. அரசுப் பள்ளிகளை ஒரு குறிப்பிட்ட காலம் வரை, தனியாருக்கு தத்து கொடுத்து, மேம்படுத்தும் திட்டத்தை, கோவையில் முதன்மைக் கல்வி அலுவலராகப் பணிபுரிந்த கார்மேகம் அறிமுகம் செய்தார். தற்போது, மேல்நிலைக் கல்விக்கான இணை இயக்குனராக சென்றபின், மாநிலம் முழுவதும் அத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

      குறிப்பாக, தொழிலதிபர்கள் அதிகமாக உள்ள கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இத்திட்டத்துக்கு வரவேற்பு பெருகி வருகிறது. கோவை கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் காந்திமாநகர் அரசு உயர்நிலைப் பள்ளிகளை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பிலும், கீரணத்தம், சின்னவேடம்பட்டி, குரும்பபாளையம், குன்னத்தூர், ஒரக்கால்பாளையம், சரவணம்பட்டி பகுதிகளில் உள்ள ஆறு அரசுப் பள்ளிகள் "சி.ஆர்.ஐ., பம்ப்ஸ்' நிறுவனம் சார்பிலும் தத்தெடுக்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

      மேலும், சில பள்ளிகளைத் தத்தெடுக்க விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. பள்ளிகளைத் தத்தெடுக்க விரும்புபவர்கள், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தம், ஐந்து ஆண்டுகளுக்கு செயல்திறன் உள்ளதாக இருக்கும். ஆய்வுக்குப் பின் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தை புதுப்பிக்க முடியும்.

      இத்திட்டத்தின் மாநில அளவிலான துவக்க விழா, மார்ச் 3ம் தேதி, கோவை ஜி.டி.நாயுடு அரங்கில் நடைபெற உள்ளது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செயலர் குற்றாலிங்கம், இயக்குனர் பெருமாள்சாமி, எஸ்.எஸ்.ஏ., கவுரவ ஆலோசகர் விஜயக்குமார் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

      நன்றி: தினமலர் (பிப்ரவரி 28,2009)
      சுட்டி: http://www.dinamalar.in/pothunewsdetail.asp?News_id=11323&cls=&ncat=TN

      Read more...

      தொடர்ந்து போராடினால் ஒரு நாள எதிர்ப்புகள் முறிந்துவிடும்

      Sunday, May 3, 2009

      என்னுடைய கீழியல்பு முன்பு செய்த அதே முட்டாள்தனமான காரியங்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. நீர் ஒருவர்தாம் அதை மாற்ற முடியும். அதற்கு உமது நிபந்தனைகள் எவை?

      அன்னை:

      1. உன்னால் மாறமுடியும் என்று உறுதியாக நம்ப வேண்டும்.

      2. கீழியல்பு சொல்லும் சமாதானங்களை ஏற்காமல் மாற வேண்டும் என்று சங்கற்பிக்க வேண்டும்.

      3. எத்தனை தடவைகள் விழுந்தாலும் அந்த சங்கற்பத்தில் விடாப்பிடியாக இருக்க வேண்டும்.

      4. நீ பெறும் உதவியில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்க வேண்டும்.

      உன்னுடைய ஆர்வத்திலும் முயற்சியிலும் அயராதிரு, பின்னடைவுகளினால் சோர்ந்து போய்விடாதே. தொடக்கத்தில் அவ்வாறு ஏற்படவே செய்யும். அவற்றைச் சட்டை செய்யாமல் நீ தொடர்ந்து போராடினால் ஒரு நாள எதிர்ப்புகள் முறிந்துவிடும், கஷ்டங்கள் மறைந்துவிடும். என் உதவி உனக்கு எப்போதும் உண்டு, ஆனால் நீ அதைப் பயன்படுத்திக் கொள்ளவும் உன்னுடைய திறமைகளையே நம்பியிராமல் அதை நம்பியிருக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்.

      வைகற
      (ஸ்ரீஅர‌வி‌ந்ஆ‌சிரம‌ககாலா‌ண்டவெ‌ளி‌யீடு)

      நன்றி: வெப்துனியா

      Read more...

      இது நான் அதிக உயரத்திற்கு உயர முடியும் என்பதைக் காட்டுகிறது


      அன்னை
      நீ உன்னையே கூர்ந்து நோக்கினால் நீ பெற வேண்டிய நற்குணத்திற்கு நேர் எதிரானது உன்னுள் இருப்பதைக் காண்பாய் ("நற்குணம்" என்பதை அதன் மிக விரிவான, மிக உயர்ந்த பொருளில் பயன்படுத்துகிறேன்) உனக்கு ஒரு சிறப்புக் குறிக்கோள், ஒரு சிறப்புத் தெய்வப் பணி, ஒரு சிறப்பு அனுபூதி, உனக்கே உரிய ஒன்று உள்ளது. அதே சமயம் எல்லாத் தடைகளும் உன்னுள் இருக்கின்றன.

      எப்பொழுதுமே உன்னுள்ளே உள்ள நிழலுருவமும் ஒளியும் சமமாக இருப்பதை நீ காண்பாய். உன்னிடம் ஒரு திறமை இருக்கும், அதற்கு எதிர்மறையானதும் இருக்கும். ஆனால் உன்னுள் மிகக் கரிய துளை, அடர்த்தியான ஒரு நிழலுரு இருக்கக் கண்டால், உன்னுள் எங்கோ ஒரு பெரிய ஒளி உள்ளது என்று நீ உறுதியாக நம்பலாம். அந்த ஒளியை அடைய மற்றதை எப்படிப் பயன்படுத்துவது என்று கற்றுக் கொள்வது உன் பொறுப்பு. உன்னிடம் மிகப்பெரிய பலவீனம் இருக்கக் கண்டால் நம்பிக்கை இழந்து விடாதே, ஏனெனில் அது மிகப் பெரிய தெய்வீக பலத்திற்கு அடையாளமாக இருக்கக் கூடும். "நான் இப்படி இருக்கிறேன், என்னால் வேறு வகையாக இருக்க முடியாது" என்று சொல்லாதே. அது உண்மை அன்று, நீ அதற்கு எதிரானதாக இருக்க வேண்டும் என்பதுதான். "அப்படி இருப்பதற்கு" காரணமே, உன்னுடைய எல்லாக் கஷ்டங்களும் இருக்கக் காரணமே அவற்றை நீ உருமாற்றஞ்செய்ய வேண்டும் என்பதுதான்.

      நீ இதைப் புரிந்து கொண்டுவிட்டால் பல கவலைகள் மறைந்துவிடும், நீ மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பாய், மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பாய். உன்னிடம் மிகக்கரிய துளைகள் இருக்கக் கண்டால், நீ "இது நான் அதிக உயரத்திற்கு உயர முடியும் என்பதைக் காட்டுகிறது" என்று சொல்லுவாய், படுகுழி மிக ஆழமாக இருந்தால், "இது நான் அதிக உயரத்திற்கு ஏற முடியும்" என்பதைக் காட்டுகிறது என்று சொல்லுவாய். பிரபஞ்ச நோக்கிலிருந்தும் இதுதான் உண்மை.

      தன்னில் உள்ள இருண்ட பக்கத்தைப் பார்த்த கணத்தில், அதைப் பார்த்து நீ "இது நான்" என்று சொல்லாமல், "இல்லை, இது என்னுடைய நிழலுரு, இது என்னைவிட்டு வெளியே எறிய வேண்டிய ஒன்று" என்று சொன்னால், நீ மறுபக்கத்தின் ஒளியை அதன்மீது பாய்ச்சுவாய், இரண்டையும் நேருக்கு நேர் சந்திக்கச் செய்வாய். இப்பொழுது மறுபக்கத்தின் ஞானத்தையும் ஒளியையும் கொண்டு நிழலுருவை அமைதியாக இருக்கும்படி கட்டாயப்படுத்த வேண்டும்.

      அதற்கு அறிவூட்ட முயலக்கூடாது, அது மிகவும் கடினம்... முதலில் அதிலிருந்து தொலைவில் விலகி நிற்க வேண்டும், பிறகு அதன் மீது ஒரு பெரிய ஒளியைச் செலுத்தி, அது திரும்பிவர முடியாதபடி வெகு தொலைவிற்கு வீசி எறிய வேண்டும். சில சமயங்களில் அதை மாற்ற முடியும், ஆனால் அது மிகவும் அரிது. சில சமயங்களில் அதன் மீது மிக வலுவான ஒளியைச் செலுத்தி அதை உருமாற்றஞ் செய்ய முடியும். அப்பொழுது அது உன்னுடைய ஜீவனின் உண்மை எதுவோ அதுவாக மாறும்.

      ஆனால் இது அரிது.. அப்படிச் செய்ய முடியும். பொதுவாக, மிகச் சிறந்தது, "இல்லை, இது நான் அல்ல! அது எனக்கு வேண்டாம்! இந்த இயக்கத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை, அது என் இயல்பிற்கு மாறுபட்ட ஒன்று, என்னைப் பொறுத்தவரை அது இல்லை!" என்று சொல்லுவதுதான். இவ்வாறு மீண்டும் மீண்டும் வற்புறுத்துவதன் மூலமும் அதை வெளியே விரட்டுவதன் மூலமும் முடிவில் ஒருவன் தன்னை அதிலிருந்து பிரித்துக் கொள்ள முடியும்.

      முதலாவது தன்னிடமுள்ள முரண்பாட்டை உணரும் அளவுக்கு ஒருவனிடம் தெளிவும் நேர்மையும் இருக்க வேண்டும்.


      ந‌ன்‌றி -வைகற
      (ஸ்ரீஅர‌வி‌ந்ஆ‌சிரம‌ககாலா‌ண்டவெ‌ளி‌யீடு)

      நன்றி: வெப்துனியா

      Read more...

      உனக்கு நீயே எஜமான்


      அன்னை
      விஷயங்கள், சூழ்நிலைகள், வாழ்வின் எல்லா இயக்கங்களும், செயல்களும் உணர்வின்மேல் உண்டாக்கும் விளைவு அநேகமாக முற்றிலு‌நாம் இவ்விஷயங்கள்பால் கொள்ளும் மனப்பான்மையையே பொறுத்திருக்கும் உணர்வுநிலை ஒன்றுள்ளது. விஷயங்கள் தம்மளவில் நல்லவையோ கெட்டவையோ அல்ல என்பதை அறியும் அளவிற்கு உணர்வு பெறும் நேரம் ஒன்று உள்ளது: நம்மைப் பொறுத்தமட்டிலேதான் அவை நல்லவையாகவோ கெட்டவையாகவோ இருக்கின்றன; அவற்றினால் நம்மீது ஏற்படும் விளைவு முற்றிலும் அவற்றின்பால் நாம் கொள்ளும் மனப்பான்மையைப் பொறுத்ததாகவே இருக்கும்.

      அதை இறைவனது கொடையாக இறைவனது அருளாக முழு இசைவின் விளைவாக நாம் எடுத்துக் கொண்டோமானால் நாம் அதிக உணர்வு பெறவும், அதிக வலிமை பெறவும், அதிக உண்மையானவர்களாக ஆகவும் உதவும்; ஆனால் அதையே சிறிதுகூட மாற்றமில்லாமல் அதேமாதிரி சூழ்நிலை - அதையே விதியின் அடியாக, நமக்குத் தீங்கிழைக்க விரும்பும் தீய சக்தியாக எடுத்துக் கொண்டோமானால் அது நம்மைச் சுருங்கச் செய்யும், சோர்வடையச் செய்யும், நம்மிடமிருந்து உணர்வையும் வலிமையையும் இசைவையும் போக்கிவிடும், இருப்பினும் சந்தர்ப்பமோ மிகத்துல்லியமாய் அதே மாதிரியானதே - நீங்கள் எல்லோரும் இந்த அனுபவம் பெற வேண்டும்; ஏனெனில் இந்த அனுபவம் பெற்றால், நீ சுதந்திரமாயிருப்பாய். உனக்கு நீயே எஜமானனாக இருப்பாய் அல்லது சூழ்நிலைகள் உன் கட்டுப்பாட்டிற்கு அடங்கியவையாக இருக்கும்.

      இது முற்றிலும் நீ கொள்ளும் மனப்பான்மையையே பொறுத்தது. இது தலையில் நிகழும் அனுபவம் அல்ல - தலையில் தொடங்கக்கூடும் - இது உடலிலேயே நிகழக்கூடிய அனுபவம். ஆனால் இதில் சித்தி பெற நிறைய வேலை தேவை. ஒரு முனைப்பு தன்னாட்சி, சடத்தினுள் உணர்வைத் தள்ளுதல் எல்லாம் தேவை; ஆனால் அதன் விளைவாக உடல் வெளியிலிருந்து வரும் அதிர்ச்சிகளை ஏற்கும் முறைக்கு ஏற்றபடி, விளைவு மாறுபடலாம். இந்தத் துறையில் நீ பூரணம் பெற்றுவிட்டால், விபத்துகள் ஏற்படாமல் தடுத்துவிடலாம். அவ்வாறு நடக்கும் என்று நம்புகிறேன். அது சாத்தியம், சாத்தியம் மட்டுமல்ல, நிச்சயம். அதற்கு இன்னும் ஓர் அடி முன்னால் செல்ல வேண்டும், அவ்வளவுதான். அதாவது உன்னிடம் இந்த ஆற்றல் இருக்கிறது - ஏற்கனவே மனத்தில் முழுமையாக தடுக்க முடியாதபடி சித்தியாகிவிட்டது - சந்தர்ப்பங்கள் மீது செயல்பட்டு அவை உன் மீது செயல்படுவதை முழுமையாக மாற்றிவிடும் ஆற்றல் இருக்கிறது‌; அந்த ஆற்றல் சடத்தினுள் இறங்க முடியும், தூலப் பொருளினினுள், உடலின் அணுக்களுள் இறங்கி, அதே ஆற்றலை உடலுக்கு, அதைச் சுற்றியுள்ள பொருட்கள் சம்பந்தமாகக் கொடுக்க முடியும்.

      இது வெறும் நம்பிக்கை அல்ல, அனுபவத்திலிருந்து வரும் உறுதிப்பாடு.

      இது உனது அனுபவ எல்லையை விரிவாக்குகிறது; இது உருமாற்றத்திற்கு இட்டுச்செல்லும் பாதையில் மற்றுமோர் படி.

      நாம்தாம் வரம்புகளை உண்டாக்கிக் கொள்கிறோம். நாம் பொழுதெல்லாம், "அது சாத்தியம், ஆனால் அந்த இன்னொன்று சாத்தியமில்லை; என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாமேதாம் காலமெல்லாம் நம்மை அடிமைகளைப் போல நமது வரம்புகளாகிய சிறைக்குள்ளே, வாழ்க்கையின் விதிகள் எதையுமே தெரிந்து கொள்ளாத நமது அறிவற்ற குறுகிய அஞ்ஞான புலனின் சிறைக்குள்ளே நம்மை அடைத்துவைக்கிறோம். வாழ்க்கையின் விதிகள் நீங்கள் நினைப்பது போலோ, மிகப்பெரிய அறிவாளிகள் நினைப்பது போலோ இல்லவே இல்லை. அவை முற்றிலும் வேறாக உள்ளன. இந்த வழியில் ஓர் அடி எடுத்து வைத்தால் - நீ அதைக் கண்டுபிடிக்கத் தொடங்குவாய்.

      வைகறை
      (ஸ்ரீஅர‌வி‌ந்த ஆ‌சிரம‌க் காலா‌ண்டு வெ‌ளி‌யீடு)

      நன்றி: வெப்துனியா

      Read more...

      Donate a Link for Green World - NGO

      You can donate a link from your blog or website for Green World - NGO, A Non-Profit Social Welfare Organization functioning at Erode.
      This is what you will see.



      Optionally use this Widget installer to add this link to your blogger blog.

        © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

      Back to TOP